விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடல்
Jul 26, 2025, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடல்

Web Desk by Web Desk
Jan 25, 2024, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

75-வது குடியரசு தின அணிவகுப்பைக் காண “சிறப்பு விருந்தினர்களாக” அழைக்கப்பட்டுள்ள, பிரதமரின் விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கலந்துரையாடினார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டப் பயனாளிகளுடன் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்துறை அமைச்சர் நாராயண் ரானே இன்று கலந்துரையாடினார். இந்த பயனாளிகள் தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு, 2024-ஐ காண பாதுகாப்பு அமைச்சகத்தால் “சிறப்பு விருந்தினர்களாக” அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, பிரதமரின் விஸ்வகர்மா திட்ட பயனாளிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் படி, கிராமங்களில் உள்ள பாரம்பரிய கைவினைஞர்களை ஆதரிப்பதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் கைவினை திறன்களை மேம்படுத்தவும், ஒரு தொழில்முனைவோராக மாறவும், தங்கள் நிறுவனத்தை நிறுவ இத்திட்டம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 18 தொழிற்பிரிவுகளைச் சார்ந்த கைவினைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் ஒரு முழுமையான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்து 964 விண்ணப்பங்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் வரும் தொழில்களில் 108 பெண் கைவினைஞர்களும், 148 ஆண் கைவினைஞர்களும் உள்ளனர். இவ்வாறு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் 256 பயனாளிகள், தங்கள் கணவன், மனைவியுடன் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின அணி வகுப்பு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் வடகிழக்கு மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் உட்பட 20 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

Tags: pmmodirepublicday
ShareTweetSendShare
Previous Post

விருது பெறுவதிலும் உலக சாதனை படைத்த விராட் கோலி !

Next Post

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies