விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடல்
Jul 31, 2026, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடல்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 25, 2024, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

75-வது குடியரசு தின அணிவகுப்பைக் காண “சிறப்பு விருந்தினர்களாக” அழைக்கப்பட்டுள்ள, பிரதமரின் விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கலந்துரையாடினார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டப் பயனாளிகளுடன் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்துறை அமைச்சர் நாராயண் ரானே இன்று கலந்துரையாடினார். இந்த பயனாளிகள் தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு, 2024-ஐ காண பாதுகாப்பு அமைச்சகத்தால் “சிறப்பு விருந்தினர்களாக” அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, பிரதமரின் விஸ்வகர்மா திட்ட பயனாளிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் படி, கிராமங்களில் உள்ள பாரம்பரிய கைவினைஞர்களை ஆதரிப்பதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் கைவினை திறன்களை மேம்படுத்தவும், ஒரு தொழில்முனைவோராக மாறவும், தங்கள் நிறுவனத்தை நிறுவ இத்திட்டம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 18 தொழிற்பிரிவுகளைச் சார்ந்த கைவினைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் ஒரு முழுமையான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்து 964 விண்ணப்பங்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் வரும் தொழில்களில் 108 பெண் கைவினைஞர்களும், 148 ஆண் கைவினைஞர்களும் உள்ளனர். இவ்வாறு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் 256 பயனாளிகள், தங்கள் கணவன், மனைவியுடன் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின அணி வகுப்பு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் வடகிழக்கு மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் உட்பட 20 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

Tags: pmmodirepublicday
ShareTweetSendShare
Previous Post

விருது பெறுவதிலும் உலக சாதனை படைத்த விராட் கோலி !

Next Post

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies