வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக மக்களவையில் தவறாக கூறிய பிரியங்கா காந்தியை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நகைச்சுவையாக விமர்சித்தார்.
உலக மக்கள் தொகையே சுமார் 800 கோடிதான் எனும்போது, இந்தியாவில் 750 கோடி பேர் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள் என ஜிதேந்திர சிங் புன்முறுவலுடன் கேள்வி எழுப்பினார்.
மேலும், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை பிரியங்கா காந்தி விமர்சித்ததை மேற்கோள்காட்டிய ஜிதேந்திர சிங், பிரியங்கா காந்தி எதில் நிபுணத்துவம் பெற்றவர்? என கேள்வி எழுப்பினார்.
















