குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 25, 2024, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை இளைஞர்கள் தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் இன்னும் சில மாதங்களில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதை அடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சாரம் செய்வது குறித்தும் ஆலோசித்து வருகின்றன. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. இளைஞரணி சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கான பொதுக்கூட்டத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இளம் தலைமுறை வாக்காளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது, இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் எதிர்கால இந்தியாவை தீர்மானிக்கும். இளைஞர்களுக்கு எதிராக சில கட்சி தலைவர்களின் மனநிலை உள்ளது. உங்கள் வாக்கு பலத்தால் இந்தக் குடும்பக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக காந்தி குடும்பத்தைச் சுற்றியே இயங்குகிறது. நேருவின் மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் கட்சியை அதிகாரப்பூர்வமாக வழிநடத்தாதபோதும், கட்சியில் முக்கிய நபர்களாக இருந்துள்ளனர்.

கடந்த 10-12 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவிய சூழல் இளைஞர்களின் வாழ்க்கையை இருண்டதாக்கி விட்டது. தமது அரசு நாட்டை இருளில் இருந்து மீட்டுள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தேர்தல் அறிக்கைக்கான ஆலோசனைகளை நமோ செயலி மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு எல்லா இடங்களிலும், ஊழல் மற்றும் மோசடிகள் இருந்தன. ஆனால், தற்போது, பல்வேறு துறைகளின் வெற்றிக் கதைகள் குறித்து பேசப்படுகிறது. உங்களின் கனவுகள்தான் எனது தீர்மானம் என்பது மோடியின் உத்தரவாதம் என்று கூறினார்.

Tags: PM Modibjp modimodi appeal to votersyoung indian voters
ShareTweetSendShare
Previous Post

விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடல்

Next Post

குழந்தை இராமரின் முதல் லீலை !

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies