குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Mar 15, 2026, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 25, 2024, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை இளைஞர்கள் தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் இன்னும் சில மாதங்களில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதை அடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சாரம் செய்வது குறித்தும் ஆலோசித்து வருகின்றன. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. இளைஞரணி சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கான பொதுக்கூட்டத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இளம் தலைமுறை வாக்காளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது, இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் எதிர்கால இந்தியாவை தீர்மானிக்கும். இளைஞர்களுக்கு எதிராக சில கட்சி தலைவர்களின் மனநிலை உள்ளது. உங்கள் வாக்கு பலத்தால் இந்தக் குடும்பக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக காந்தி குடும்பத்தைச் சுற்றியே இயங்குகிறது. நேருவின் மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் கட்சியை அதிகாரப்பூர்வமாக வழிநடத்தாதபோதும், கட்சியில் முக்கிய நபர்களாக இருந்துள்ளனர்.

கடந்த 10-12 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவிய சூழல் இளைஞர்களின் வாழ்க்கையை இருண்டதாக்கி விட்டது. தமது அரசு நாட்டை இருளில் இருந்து மீட்டுள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தேர்தல் அறிக்கைக்கான ஆலோசனைகளை நமோ செயலி மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு எல்லா இடங்களிலும், ஊழல் மற்றும் மோசடிகள் இருந்தன. ஆனால், தற்போது, பல்வேறு துறைகளின் வெற்றிக் கதைகள் குறித்து பேசப்படுகிறது. உங்களின் கனவுகள்தான் எனது தீர்மானம் என்பது மோடியின் உத்தரவாதம் என்று கூறினார்.

Tags: PM Modibjp modimodi appeal to votersyoung indian voters
ShareTweetSendShare
Previous Post

விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடல்

Next Post

குழந்தை இராமரின் முதல் லீலை !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies