இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றத் தீர்மானியுங்கள் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பாரதத்தை வளர்ந்த மற்றும் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், துணிச்சலான வீரர்கள் மற்றும் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்த்தையும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், 75-வது குடியரசு தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
இன்று, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியலமைப்பு இயற்றிய அனைவரையும் தலை வணங்குகிறேன் என நட்டா பதிவிட்டுள்ளார்.