இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா 175 ரன்கள் முன்னிலை !
Jul 26, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா 175 ரன்கள் முன்னிலை !

Web Desk by Web Desk
Jan 26, 2024, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

இதன் முதல் போட்டி நேற்று  தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஸ்ட்ரைக்கில் இருந்தனர்.

இதில் ஜெய்ஸ்வால் 76 ரன்களும், சுப்மன் கில் 14 ரன்களும் எடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று போட்டி தொடங்கிய உடனே ஜெய்ஸ்வால் ஒரு பௌண்டரி அடித்து 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து விளையாடி வந்த சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி 8 பௌண்டரீஸ், 2 சிக்சர்கள் உட்பட 123 பந்துகளில் 86 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 3 பௌண்டரீஸ், 1 சிக்சர் என 63 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத் 81 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

தமிழக வீரரான ரவிச்சந்திர அஸ்வின் 1 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா 7 பௌண்டரீஸ், 2 சிக்சர்கள் உட்பட 155 பந்துகளில் 81 பந்துகள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

அதேபோல் அக்சார் பட்டேல் 5 பௌண்டரீஸ், 1 சிக்சர் உட்பட 62 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் ஸ்ட்ரைக்கில் உள்ளார்.

இதனால் இந்தியா இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Tags: Indiasportsenglandhydreabadtest cricketindiancricket
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தின விழா : கர்தவ்யா பாதையில் புடவைகள் காட்சி !

Next Post

தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய நடிகர் மன்சூர் அலிகான்!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies