இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா 175 ரன்கள் முன்னிலை !
Jan 14, 2026, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா 175 ரன்கள் முன்னிலை !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

இதன் முதல் போட்டி நேற்று  தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஸ்ட்ரைக்கில் இருந்தனர்.

இதில் ஜெய்ஸ்வால் 76 ரன்களும், சுப்மன் கில் 14 ரன்களும் எடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று போட்டி தொடங்கிய உடனே ஜெய்ஸ்வால் ஒரு பௌண்டரி அடித்து 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து விளையாடி வந்த சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி 8 பௌண்டரீஸ், 2 சிக்சர்கள் உட்பட 123 பந்துகளில் 86 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 3 பௌண்டரீஸ், 1 சிக்சர் என 63 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத் 81 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

தமிழக வீரரான ரவிச்சந்திர அஸ்வின் 1 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா 7 பௌண்டரீஸ், 2 சிக்சர்கள் உட்பட 155 பந்துகளில் 81 பந்துகள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

அதேபோல் அக்சார் பட்டேல் 5 பௌண்டரீஸ், 1 சிக்சர் உட்பட 62 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் ஸ்ட்ரைக்கில் உள்ளார்.

இதனால் இந்தியா இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Tags: Indiasportsenglandhydreabadtest cricketindiancricket
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தின விழா : கர்தவ்யா பாதையில் புடவைகள் காட்சி !

Next Post

தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய நடிகர் மன்சூர் அலிகான்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies