இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா 175 ரன்கள் முன்னிலை !
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா 175 ரன்கள் முன்னிலை !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 05:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

இதன் முதல் போட்டி நேற்று  தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஸ்ட்ரைக்கில் இருந்தனர்.

இதில் ஜெய்ஸ்வால் 76 ரன்களும், சுப்மன் கில் 14 ரன்களும் எடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று போட்டி தொடங்கிய உடனே ஜெய்ஸ்வால் ஒரு பௌண்டரி அடித்து 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து விளையாடி வந்த சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி 8 பௌண்டரீஸ், 2 சிக்சர்கள் உட்பட 123 பந்துகளில் 86 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 3 பௌண்டரீஸ், 1 சிக்சர் என 63 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத் 81 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

தமிழக வீரரான ரவிச்சந்திர அஸ்வின் 1 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா 7 பௌண்டரீஸ், 2 சிக்சர்கள் உட்பட 155 பந்துகளில் 81 பந்துகள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

அதேபோல் அக்சார் பட்டேல் 5 பௌண்டரீஸ், 1 சிக்சர் உட்பட 62 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் ஸ்ட்ரைக்கில் உள்ளார்.

இதனால் இந்தியா இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Tags: Indiasportsenglandhydreabadtest cricketindiancricket
Share
Tweet
SendShare
Previous Post

குடியரசு தின விழா : கர்தவ்யா பாதையில் புடவைகள் காட்சி !

Next Post

தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய நடிகர் மன்சூர் அலிகான்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies