முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா? எஸ்.ஜி.சூர்யா
Sep 7, 2025, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா? எஸ்.ஜி.சூர்யா

Web Desk by Web Desk
Jan 27, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்து தான் பேசுகிறீர்களா? என தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூகநீதி காப்பதற்கே நான் இருக்கிறேன் என கனவில் வாழும் முதல்வருக்கு எனது முதற்கண் வணக்கம்.

நாட்டில் என்ன நடந்தாலும் எனக்கு செவியில் கேட்காது. எனக்கு எனது படப்பிடிப்பே முக்கியம் என இருக்கும் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், எழுதியதை பார்த்து படித்தபோது ‘இன்றைய புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுகின்ற பட்டியலின மக்களின் நலனைப் பாதுகாக்கிற அரசுதான், நமது திராவிட மாடல் அரசு!’என வழக்கம் போல் அதன் அர்த்தம் தெரியாமல் படித்துவிட்டார்…!

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா?வேங்கைவயல்  சம்பவம் நடந்து இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.  தொடர்ந்து பட்டியலின மக்களை உங்கள் கட்சிக்காரர்களின் வசவுகளில் இருந்தும்,  அவர்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைகளில் இருந்தும் காப்பாற்றவே உங்களால் முடியவில்லை.

உங்கள் மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்த அலங்காரம் செய்துகொண்டு சமூகநீதி வார்த்தை ஜாலங்கள் வேறு!  கிட்டத்தட்ட மூழ்கி விட்ட கப்பலில் இருந்து தப்பிக்கும் எலிகள் போல ஏற்கனவே மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார்,  அரவிந்த் கெஜிரிவால் தப்பித்துவிட்ட நிலையில் ‘எப்போ கிளம்புவோம் என நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஏன் இந்த அலங்கார பேச்சுக்கள்?முத்தமிழ் வாய் வித்தகர் உங்கள் தந்தை பார்த்த வியாபாரத்தை தற்போது நீங்களும் பார்க்க நினைக்காதீர்கள்.

நமத்துப்போன பொறி விற்காது என்பது என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும் அய்யா..?தயவுசெய்து மீதமிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள். நான் சொன்னது தமிழக மக்களுக்கு. உங்கள் வீட்டு மக்களுக்கல்ல என எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

Tags: thirumabjpTamilNadu BjpM K StalinSG Suryatamil Nadu BJP State Secretary
ShareTweetSendShare
Previous Post

நீலகிரியில் தொடரும் பனிப்பொழிவு – வானிலை மையம் எச்சரிக்கை!

Next Post

டிரம்புக்கு எதிராக எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு : 690 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! 

Related News

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு – மாநில நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

ஆவணி மாத பவுர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies