தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி: ஆளுநர் தமிழிசை விமர்சனம்!
Oct 2, 2025, 09:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி: ஆளுநர் தமிழிசை விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 27, 2024, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்ததாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது, அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இதனால், ஒரு கட்டத்தில் ஆளுநர் உரை இல்லாமலேயே சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினார். மேலும், ஆளுநர் தேநீர் விருந்து உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில், நாட்டின் 75-வது குடியரசு தின விழா ஐதராபாத்தில் நடந்தது. இவ்விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சாசன முறைக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பாகட்டும், மக்களின் வாழ்வாதாரமாகட்டும் முந்தைய அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடித்து வந்தது. அதேபோல, தெலங்கானா மாநிலம் பிரிவதற்கு முக்கியப் பங்கு வகித்த இளைஞர்களின் நலன் குறித்து மாநில அரசு சிந்திக்கவில்லை.

ஆகவேதான், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், சர்வாதிகார அரசுக்கு தெலங்கானா மக்கள் முடிவுரை எழுதி விட்டனர். இதன் மூலம், மக்களின் வாக்குகள் எதேச்சதிகாரத்துக்கும் ஆணவத்துக்கும் இடமில்லை என்பதை அறிவித்திருக்கிறது.

முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான புதிய அரசு மக்களுக்கு சம வாய்ப்புகளையும், சமூக நீதியையும் வழங்குவதோடு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சுதந்திரம் வழங்கும் நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. இதன் மூலம் அரசியல் சாசன நடைமுறைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: TelanganaGovernorTamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சிறப்பு இரயில்கள் இயக்கம்!

Next Post

இரண்டு வாரத்தில் பெரிய அளவு வசூல் செய்த ஹனுமான் படம் !

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies