தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி: ஆளுநர் தமிழிசை விமர்சனம்!
Mar 15, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி: ஆளுநர் தமிழிசை விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்ததாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது, அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இதனால், ஒரு கட்டத்தில் ஆளுநர் உரை இல்லாமலேயே சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினார். மேலும், ஆளுநர் தேநீர் விருந்து உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில், நாட்டின் 75-வது குடியரசு தின விழா ஐதராபாத்தில் நடந்தது. இவ்விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சாசன முறைக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பாகட்டும், மக்களின் வாழ்வாதாரமாகட்டும் முந்தைய அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடித்து வந்தது. அதேபோல, தெலங்கானா மாநிலம் பிரிவதற்கு முக்கியப் பங்கு வகித்த இளைஞர்களின் நலன் குறித்து மாநில அரசு சிந்திக்கவில்லை.

ஆகவேதான், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், சர்வாதிகார அரசுக்கு தெலங்கானா மக்கள் முடிவுரை எழுதி விட்டனர். இதன் மூலம், மக்களின் வாக்குகள் எதேச்சதிகாரத்துக்கும் ஆணவத்துக்கும் இடமில்லை என்பதை அறிவித்திருக்கிறது.

முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான புதிய அரசு மக்களுக்கு சம வாய்ப்புகளையும், சமூக நீதியையும் வழங்குவதோடு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சுதந்திரம் வழங்கும் நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. இதன் மூலம் அரசியல் சாசன நடைமுறைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: TelanganaGovernorTamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சிறப்பு இரயில்கள் இயக்கம்!

Next Post

இரண்டு வாரத்தில் பெரிய அளவு வசூல் செய்த ஹனுமான் படம் !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies