தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி: ஆளுநர் தமிழிசை விமர்சனம்!
Sep 10, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி: ஆளுநர் தமிழிசை விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 04:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்ததாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது, அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இதனால், ஒரு கட்டத்தில் ஆளுநர் உரை இல்லாமலேயே சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினார். மேலும், ஆளுநர் தேநீர் விருந்து உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில், நாட்டின் 75-வது குடியரசு தின விழா ஐதராபாத்தில் நடந்தது. இவ்விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சாசன முறைக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பாகட்டும், மக்களின் வாழ்வாதாரமாகட்டும் முந்தைய அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடித்து வந்தது. அதேபோல, தெலங்கானா மாநிலம் பிரிவதற்கு முக்கியப் பங்கு வகித்த இளைஞர்களின் நலன் குறித்து மாநில அரசு சிந்திக்கவில்லை.

ஆகவேதான், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், சர்வாதிகார அரசுக்கு தெலங்கானா மக்கள் முடிவுரை எழுதி விட்டனர். இதன் மூலம், மக்களின் வாக்குகள் எதேச்சதிகாரத்துக்கும் ஆணவத்துக்கும் இடமில்லை என்பதை அறிவித்திருக்கிறது.

முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான புதிய அரசு மக்களுக்கு சம வாய்ப்புகளையும், சமூக நீதியையும் வழங்குவதோடு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சுதந்திரம் வழங்கும் நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. இதன் மூலம் அரசியல் சாசன நடைமுறைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: TelanganaGovernorTamilisai Soundararajan
Share
Tweet
SendShare
Previous Post

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சிறப்பு இரயில்கள் இயக்கம்!

Next Post

இரண்டு வாரத்தில் பெரிய அளவு வசூல் செய்த ஹனுமான் படம் !

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies