தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி: ஆளுநர் தமிழிசை விமர்சனம்!
Jul 27, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி: ஆளுநர் தமிழிசை விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்ததாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது, அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இதனால், ஒரு கட்டத்தில் ஆளுநர் உரை இல்லாமலேயே சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினார். மேலும், ஆளுநர் தேநீர் விருந்து உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில், நாட்டின் 75-வது குடியரசு தின விழா ஐதராபாத்தில் நடந்தது. இவ்விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சாசன முறைக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பாகட்டும், மக்களின் வாழ்வாதாரமாகட்டும் முந்தைய அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடித்து வந்தது. அதேபோல, தெலங்கானா மாநிலம் பிரிவதற்கு முக்கியப் பங்கு வகித்த இளைஞர்களின் நலன் குறித்து மாநில அரசு சிந்திக்கவில்லை.

ஆகவேதான், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், சர்வாதிகார அரசுக்கு தெலங்கானா மக்கள் முடிவுரை எழுதி விட்டனர். இதன் மூலம், மக்களின் வாக்குகள் எதேச்சதிகாரத்துக்கும் ஆணவத்துக்கும் இடமில்லை என்பதை அறிவித்திருக்கிறது.

முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான புதிய அரசு மக்களுக்கு சம வாய்ப்புகளையும், சமூக நீதியையும் வழங்குவதோடு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சுதந்திரம் வழங்கும் நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. இதன் மூலம் அரசியல் சாசன நடைமுறைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: TelanganaGovernorTamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சிறப்பு இரயில்கள் இயக்கம்!

Next Post

இரண்டு வாரத்தில் பெரிய அளவு வசூல் செய்த ஹனுமான் படம் !

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies