29-ம் தேதி பரீக்ஷா பே சர்ச்சா: 2.26 கோடி பேர் பதிவு... 6 ஆண்டுகளை விஞ்சும் சாதனை!
Oct 3, 2025, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

29-ம் தேதி பரீக்ஷா பே சர்ச்சா: 2.26 கோடி பேர் பதிவு… 6 ஆண்டுகளை விஞ்சும் சாதனை!

Web Desk by Web Desk
Jan 27, 2024, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா பதிவுகள் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சாவில் 2.26 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பதிவு செய்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பரீக்ஷா பே சர்ச்சா என்பது மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க, பிரதமர் மோடி தலைமையிலான ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த சூழலில், பரீக்ஷா பே சர்ச்சாவின் 7-வது ஆண்டு நிகழ்ச்சி, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 29-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 பங்கேற்பாளர்கள் பிரதமர் மோடியுடன் உரையாடுவார்கள்.

ஆகவே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிக்ஷா பே சர்ச்சாவுக்கான தற்போதைய ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது, பரிக்ஷா பே சர்ச்சா என்பது ஒரு வருடாந்திர பாரம்பரியமாக மாறிவிட்டது என்றும், தேர்வெழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பதட்டத்தை சமாளித்து, தங்களால் முடிந்ததைச் செய்ய எதிர்நோக்குகிறோம் என்றும் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, இந்நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 2 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் மற்றும் கலா உத்சவ் வெற்றியாளர்கள் முக்கிய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள்.

அதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2.26 கோடி பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 22,000 பேர் மட்டுமே பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்கவும், பிரதமருடன் உரையாடவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே உள்ள பரவலான உற்சாகத்தை இது காட்டுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: PM Modi’sRegistrationswitness recordPariksha Pe Charcha
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது !

Next Post

மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை! :ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்.

Related News

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies