29-ம் தேதி பரீக்ஷா பே சர்ச்சா: 2.26 கோடி பேர் பதிவு... 6 ஆண்டுகளை விஞ்சும் சாதனை!
Mar 15, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

29-ம் தேதி பரீக்ஷா பே சர்ச்சா: 2.26 கோடி பேர் பதிவு… 6 ஆண்டுகளை விஞ்சும் சாதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா பதிவுகள் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சாவில் 2.26 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பதிவு செய்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பரீக்ஷா பே சர்ச்சா என்பது மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க, பிரதமர் மோடி தலைமையிலான ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த சூழலில், பரீக்ஷா பே சர்ச்சாவின் 7-வது ஆண்டு நிகழ்ச்சி, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 29-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 பங்கேற்பாளர்கள் பிரதமர் மோடியுடன் உரையாடுவார்கள்.

ஆகவே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிக்ஷா பே சர்ச்சாவுக்கான தற்போதைய ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது, பரிக்ஷா பே சர்ச்சா என்பது ஒரு வருடாந்திர பாரம்பரியமாக மாறிவிட்டது என்றும், தேர்வெழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பதட்டத்தை சமாளித்து, தங்களால் முடிந்ததைச் செய்ய எதிர்நோக்குகிறோம் என்றும் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, இந்நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 2 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் மற்றும் கலா உத்சவ் வெற்றியாளர்கள் முக்கிய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள்.

அதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2.26 கோடி பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 22,000 பேர் மட்டுமே பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்கவும், பிரதமருடன் உரையாடவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே உள்ள பரவலான உற்சாகத்தை இது காட்டுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: Pariksha Pe CharchaPM Modi’sRegistrationswitness record
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது !

Next Post

மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை! :ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்.

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies