29-ம் தேதி பரீக்ஷா பே சர்ச்சா: 2.26 கோடி பேர் பதிவு... 6 ஆண்டுகளை விஞ்சும் சாதனை!
Aug 5, 2025, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

29-ம் தேதி பரீக்ஷா பே சர்ச்சா: 2.26 கோடி பேர் பதிவு… 6 ஆண்டுகளை விஞ்சும் சாதனை!

Web Desk by Web Desk
Jan 27, 2024, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா பதிவுகள் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சாவில் 2.26 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பதிவு செய்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பரீக்ஷா பே சர்ச்சா என்பது மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க, பிரதமர் மோடி தலைமையிலான ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த சூழலில், பரீக்ஷா பே சர்ச்சாவின் 7-வது ஆண்டு நிகழ்ச்சி, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 29-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 பங்கேற்பாளர்கள் பிரதமர் மோடியுடன் உரையாடுவார்கள்.

ஆகவே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிக்ஷா பே சர்ச்சாவுக்கான தற்போதைய ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது, பரிக்ஷா பே சர்ச்சா என்பது ஒரு வருடாந்திர பாரம்பரியமாக மாறிவிட்டது என்றும், தேர்வெழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பதட்டத்தை சமாளித்து, தங்களால் முடிந்ததைச் செய்ய எதிர்நோக்குகிறோம் என்றும் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, இந்நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 2 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் மற்றும் கலா உத்சவ் வெற்றியாளர்கள் முக்கிய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள்.

அதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2.26 கோடி பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 22,000 பேர் மட்டுமே பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்கவும், பிரதமருடன் உரையாடவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே உள்ள பரவலான உற்சாகத்தை இது காட்டுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: witness recordPariksha Pe CharchaPM Modi’sRegistrations
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது !

Next Post

மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை! :ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்.

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies