29-ம் தேதி பரீக்ஷா பே சர்ச்சா: 2.26 கோடி பேர் பதிவு... 6 ஆண்டுகளை விஞ்சும் சாதனை!
Jun 14, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

29-ம் தேதி பரீக்ஷா பே சர்ச்சா: 2.26 கோடி பேர் பதிவு… 6 ஆண்டுகளை விஞ்சும் சாதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா பதிவுகள் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சாவில் 2.26 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பதிவு செய்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பரீக்ஷா பே சர்ச்சா என்பது மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க, பிரதமர் மோடி தலைமையிலான ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த சூழலில், பரீக்ஷா பே சர்ச்சாவின் 7-வது ஆண்டு நிகழ்ச்சி, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 29-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 பங்கேற்பாளர்கள் பிரதமர் மோடியுடன் உரையாடுவார்கள்.

ஆகவே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிக்ஷா பே சர்ச்சாவுக்கான தற்போதைய ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது, பரிக்ஷா பே சர்ச்சா என்பது ஒரு வருடாந்திர பாரம்பரியமாக மாறிவிட்டது என்றும், தேர்வெழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பதட்டத்தை சமாளித்து, தங்களால் முடிந்ததைச் செய்ய எதிர்நோக்குகிறோம் என்றும் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, இந்நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 2 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் மற்றும் கலா உத்சவ் வெற்றியாளர்கள் முக்கிய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள்.

அதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2.26 கோடி பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 22,000 பேர் மட்டுமே பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்கவும், பிரதமருடன் உரையாடவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே உள்ள பரவலான உற்சாகத்தை இது காட்டுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: Pariksha Pe CharchaPM Modi’sRegistrationswitness record
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது !

Next Post

மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை! :ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்.

Related News

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies