ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள்: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்!
Jul 3, 2025, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள்: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 27, 2024, 08:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தியாவுக்கு வந்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேக்ரானை வரவேற்ற பிரதமர் மோடி, நேற்று நடந்த நாட்டின் 75-வது குடியரசு தின விழாவிலும் சிறப்பு விருந்தினராக மேக்ரானை பங்கேற்கச் செய்தார்.

பின்னர், இரு தலைவர்களும் சந்தித்து உரையாடினர். இது தொடர்பாக, இந்தியா, பிரான்ஸ் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் தங்களது சந்திப்பின்போது, ஒரு சமமான மற்றும் அமைதியான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்த வலியுறுத்தினர்.

மேலும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், வளர்ந்து வரும் முன்னேற்றங்களுக்கு உலகைத் தயார்படுத்தவும், சீர்திருத்த மற்றும் பயனுள்ள பலதரப்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினர். அதேபோல, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அவசர அவசியம் கருதி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, ஐ.நா.வில் உள்ள அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில், உரை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர். ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பிரான்ஸ் தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது.

பாரிய அட்டூழியங்கள் ஏற்பட்டால் வீட்டோவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்த உரையாடல்களை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். தவிர, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை இரு தலைவர்களும் வன்மையாகக் கண்டித்தனர்.

அதேசமயம், சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளித்து, காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். இரு தலைவர்களும் அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

ஏற்கெனவே உலகில் கணிசமான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள செங்கடல் பிராந்தியத்தில் மோதல் மேலும் விரிவடைவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் அவர்கள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர். செங்கடலில் கடற்பயண சுதந்திரத்தை நிலைநிறுத்துவது மற்றும் கடல்சார் சர்வதேச சட்டத்தை மதிப்பது ஆகியவற்றின் மிக முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: pm narendra modiFrench PresidentEmmanuel MacronUN Security Councilurgent reforms
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!

Next Post

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது !

Related News

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies