ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள்: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள்: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 08:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தியாவுக்கு வந்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேக்ரானை வரவேற்ற பிரதமர் மோடி, நேற்று நடந்த நாட்டின் 75-வது குடியரசு தின விழாவிலும் சிறப்பு விருந்தினராக மேக்ரானை பங்கேற்கச் செய்தார்.

பின்னர், இரு தலைவர்களும் சந்தித்து உரையாடினர். இது தொடர்பாக, இந்தியா, பிரான்ஸ் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் தங்களது சந்திப்பின்போது, ஒரு சமமான மற்றும் அமைதியான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்த வலியுறுத்தினர்.

மேலும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், வளர்ந்து வரும் முன்னேற்றங்களுக்கு உலகைத் தயார்படுத்தவும், சீர்திருத்த மற்றும் பயனுள்ள பலதரப்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினர். அதேபோல, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அவசர அவசியம் கருதி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, ஐ.நா.வில் உள்ள அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில், உரை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர். ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பிரான்ஸ் தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது.

பாரிய அட்டூழியங்கள் ஏற்பட்டால் வீட்டோவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்த உரையாடல்களை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். தவிர, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை இரு தலைவர்களும் வன்மையாகக் கண்டித்தனர்.

அதேசமயம், சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளித்து, காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். இரு தலைவர்களும் அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

ஏற்கெனவே உலகில் கணிசமான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள செங்கடல் பிராந்தியத்தில் மோதல் மேலும் விரிவடைவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் அவர்கள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர். செங்கடலில் கடற்பயண சுதந்திரத்தை நிலைநிறுத்துவது மற்றும் கடல்சார் சர்வதேச சட்டத்தை மதிப்பது ஆகியவற்றின் மிக முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: urgent reformspm narendra modiFrench PresidentEmmanuel MacronUN Security Council
Share
Tweet
SendShare
Previous Post

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!

Next Post

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது !

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies