கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி ஆண்டு விழா முடிந்து பேருத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பாகல்கோட் மாவட்டம் அழகூர் கிராமத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழா முடிந்து மாணவர்கள் பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது பின்னாள் வந்த டிராக்டர் ஒன்று பள்ளி பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் ஒருமாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் காயம் அடைந்த மாணவர்களை அப்பகுதி மக்கள் ஜமகண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே 3 மாணவர்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 8 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகல்கோட் காவல் கண்காணிப்பாளர் அமர்நாத் ரெட்டி சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.