ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்று சாதனை படைத்தார் இந்திய வீரர்!
Sep 20, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்று சாதனை படைத்தார் இந்திய வீரர்!

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வெற்றி சாதனை படைத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகன் போபண்ணா. மேலும், இதுவே ஆண்கள் இரட்டையர் பிரிவில் அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் தன் 43 வது வயதில் ரோகன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த இறுதிப் போட்டியில் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடி, இத்தாலிய ஜோடியான சைமன் போலேலி – ஆண்ட்ரியா வாவசோரியை சந்தித்தது.

கடுமையாக நடந்த போட்டிக்கு பின் 7 – 6 (0), 7 – 5 என்ற செட் கணக்கில் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்றது.

ரோகன் போபண்ணா தன் 43வது வயதில் பெற்ற முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் ரசிகர்களால் பிரமிப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

முன்னதாக ரோகன் போபண்ணா 2013 மற்றும் 2023 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்து இருந்தார்.

அந்த வகையில் இதுவே அவரது முதல் ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் வெற்றி ஆகும். ஒரே ஒரு முறை கலப்பு இரட்டையர் பிரிவில் அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார்.

2017 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அவர் பட்டம் வென்று இருந்தார். அதன் பின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த ரோகன் போபண்ணா அந்த கனவை நனவாக்கி இருக்கிறார்.

அவரது இணையான மேத்யூ எப்டன் சிறப்பாக ஆடியதும் அவருக்கு கை கொடுத்தது. ரோகன் போபண்ணாவுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Australian Open Tennis: Indian player set a record by winning the title!
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தடை நீக்கம்! – ஐசிசி அறிவிப்பு!

Next Post

சாலை விபத்து : ஆண்டுவிழா முடிந்து திரும்பிக்கொண்டிருந்த 4 மாணவர்கள் பலி!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies