தனி காலிஸ்தான் கோரி வாக்கெடுப்பு: அமெரிக்கா "கப்சிப்"!
Jan 14, 2026, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனி காலிஸ்தான் கோரி வாக்கெடுப்பு: அமெரிக்கா “கப்சிப்”!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 29, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், சீக்கியர்களுக்கான நீதி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பினரால், காலிஸ்தான் தனி மாநிலம் கோரி வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தபோதிலும் இந்த வாக்கெடுப்பை தடுத்து நிறுத்தவில்லை.

சீக்கியர்களுக்கான நீதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனியாகப் பிரித்து காலிஸ்தான் தனி நாடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இந்த அமைப்பினரின் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை.

அதேசமயம், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள். ஆகவே, அந்நாடுகளில் இருந்தபடியே காலிஸ்தான் ஆதரவாளர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டு வருகின்றனர்.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை தீவைத்து எரித்ததோடு, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய தூதரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான்,  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோ நகரில் பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு கோரி வாக்கெடுப்பு நடத்தி இருக்கிறார்கள். சீக்கியர்களுக்கான நீதி என்கிற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினரால் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த வாக்கெடுப்புக்காக சிவிக் சென்டர் பிளாசாவில் ஒரு பெரிய கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பு இந்திய இறையாண்மைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார்கள், பேருந்துகள் மற்றும் இரயில்களில் வந்து ஏராளமானோர் வாக்களித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மேலும், வாக்களித்தவர்கள் காலிஸ்தான் தீவிரவாதி ஜர்னைல் சிங் பிந்த்ராவாலேயின் படம் பொறித்த ‘காலிஸ்தான் வாக்கெடுப்பில் நான் வாக்களித்தேன்’ என்று அச்சிடப்பட்ட நீல நிற ஸ்டிக்கர்களையும் அணிந்திருந்தனர். இதில் வேதனை என்னவென்றால், அமெரிக்கா தன்னை இந்தியவின் மிக நெருங்கிய நட்பு நாடு என்று கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த வாக்கெடுப்பை தடுக்க அமெரிக்க அரசாங்கம் என்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான். இதன் மூலம், ஏற்கெனவே கனடா நாடு காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆகவே, தற்போது அமெரிக்காவும் காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Tags: americakhalistanReferendum
ShareTweetSendShare
Previous Post

69-வது ஃபிலிம்பேர் விருதுகள் 2024!

Next Post

குறைந்த விலையில் தரமான பருப்பு! – அதிரடியில் மத்திய அரசு

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies