தனி காலிஸ்தான் கோரி வாக்கெடுப்பு: அமெரிக்கா "கப்சிப்"!
Jul 23, 2025, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனி காலிஸ்தான் கோரி வாக்கெடுப்பு: அமெரிக்கா “கப்சிப்”!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், சீக்கியர்களுக்கான நீதி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பினரால், காலிஸ்தான் தனி மாநிலம் கோரி வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தபோதிலும் இந்த வாக்கெடுப்பை தடுத்து நிறுத்தவில்லை.

சீக்கியர்களுக்கான நீதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனியாகப் பிரித்து காலிஸ்தான் தனி நாடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இந்த அமைப்பினரின் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை.

அதேசமயம், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள். ஆகவே, அந்நாடுகளில் இருந்தபடியே காலிஸ்தான் ஆதரவாளர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டு வருகின்றனர்.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை தீவைத்து எரித்ததோடு, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய தூதரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான்,  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோ நகரில் பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு கோரி வாக்கெடுப்பு நடத்தி இருக்கிறார்கள். சீக்கியர்களுக்கான நீதி என்கிற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினரால் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த வாக்கெடுப்புக்காக சிவிக் சென்டர் பிளாசாவில் ஒரு பெரிய கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பு இந்திய இறையாண்மைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார்கள், பேருந்துகள் மற்றும் இரயில்களில் வந்து ஏராளமானோர் வாக்களித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மேலும், வாக்களித்தவர்கள் காலிஸ்தான் தீவிரவாதி ஜர்னைல் சிங் பிந்த்ராவாலேயின் படம் பொறித்த ‘காலிஸ்தான் வாக்கெடுப்பில் நான் வாக்களித்தேன்’ என்று அச்சிடப்பட்ட நீல நிற ஸ்டிக்கர்களையும் அணிந்திருந்தனர். இதில் வேதனை என்னவென்றால், அமெரிக்கா தன்னை இந்தியவின் மிக நெருங்கிய நட்பு நாடு என்று கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த வாக்கெடுப்பை தடுக்க அமெரிக்க அரசாங்கம் என்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான். இதன் மூலம், ஏற்கெனவே கனடா நாடு காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆகவே, தற்போது அமெரிக்காவும் காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Tags: Referendumamericakhalistan
ShareTweetSendShare
Previous Post

69-வது ஃபிலிம்பேர் விருதுகள் 2024!

Next Post

குறைந்த விலையில் தரமான பருப்பு! – அதிரடியில் மத்திய அரசு

Related News

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies