தனி காலிஸ்தான் கோரி வாக்கெடுப்பு: அமெரிக்கா "கப்சிப்"!
Jul 19, 2026, 11:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனி காலிஸ்தான் கோரி வாக்கெடுப்பு: அமெரிக்கா “கப்சிப்”!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 29, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், சீக்கியர்களுக்கான நீதி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பினரால், காலிஸ்தான் தனி மாநிலம் கோரி வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தபோதிலும் இந்த வாக்கெடுப்பை தடுத்து நிறுத்தவில்லை.

சீக்கியர்களுக்கான நீதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனியாகப் பிரித்து காலிஸ்தான் தனி நாடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இந்த அமைப்பினரின் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை.

அதேசமயம், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள். ஆகவே, அந்நாடுகளில் இருந்தபடியே காலிஸ்தான் ஆதரவாளர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டு வருகின்றனர்.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை தீவைத்து எரித்ததோடு, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய தூதரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான்,  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோ நகரில் பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு கோரி வாக்கெடுப்பு நடத்தி இருக்கிறார்கள். சீக்கியர்களுக்கான நீதி என்கிற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினரால் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த வாக்கெடுப்புக்காக சிவிக் சென்டர் பிளாசாவில் ஒரு பெரிய கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பு இந்திய இறையாண்மைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார்கள், பேருந்துகள் மற்றும் இரயில்களில் வந்து ஏராளமானோர் வாக்களித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மேலும், வாக்களித்தவர்கள் காலிஸ்தான் தீவிரவாதி ஜர்னைல் சிங் பிந்த்ராவாலேயின் படம் பொறித்த ‘காலிஸ்தான் வாக்கெடுப்பில் நான் வாக்களித்தேன்’ என்று அச்சிடப்பட்ட நீல நிற ஸ்டிக்கர்களையும் அணிந்திருந்தனர். இதில் வேதனை என்னவென்றால், அமெரிக்கா தன்னை இந்தியவின் மிக நெருங்கிய நட்பு நாடு என்று கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த வாக்கெடுப்பை தடுக்க அமெரிக்க அரசாங்கம் என்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான். இதன் மூலம், ஏற்கெனவே கனடா நாடு காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆகவே, தற்போது அமெரிக்காவும் காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Tags: americakhalistanReferendum
ShareTweetSendShare
Previous Post

69-வது ஃபிலிம்பேர் விருதுகள் 2024!

Next Post

குறைந்த விலையில் தரமான பருப்பு! – அதிரடியில் மத்திய அரசு

Related News

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies