இண்டி கூட்டணியை தொடங்கியவரே அந்த கூட்டணியில் இல்லை - அண்ணாமலை
Jan 14, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணியை தொடங்கியவரே அந்த கூட்டணியில் இல்லை – அண்ணாமலை

தேர்தல் வரும் வரை கூட நீடிக்காத சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டணி உருவாக காரணமான பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரே அந்த கூட்டணியில் இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,சங்கராபுரம் சட்டமன்றத்தொகுதியில், நேற்று பயணத்தை தொடர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது :

கஷ்டங்களை எல்லாம் போக்கும் கங்கை முத்து மாரியம்மன் அருள்புரியும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத்தொகுதியில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பெரும் திரளெனக் கூடிய பொதுமக்கள் ஆரவாரத்துடன் என் மண் என் மக்கள் பயணம் சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு தொடர்ச்சி மலையின் பழமையான பகுதிகளில் ஒன்றான கல்வராயன் மலை அமைந்துள்ள தொகுதி.

பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 50,030 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,51,824 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,74,938 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 66,512 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,97,714 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,81,648 விவசாயிகளுக்கு, PM Kisan நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், முத்ரா கடன் உதவி 512 கோடி ரூபாய் என, மத்திய அரசின் நலத்திட்டங்கள் லட்சக்கணக்கான மக்களைச்  சென்றடைந்துள்ளன.

பத்து ஆண்டுகளாக, மத்தியில் ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சி வழங்கிக்  கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த சந்தர்ப்பவாத இண்டி கூட்டணியில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தான் இண்டி கூட்டணியைத்  தொடங்கியவர். தற்போது அவரே அந்த கூட்டணியில் இல்லை. இவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணி, தேர்தல் வரும் வரை கூட தாங்கவில்லை.

வரும் பாராளுமன்றத் தேர்தல், நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல், இளைஞர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கான தேர்தல். பத்து ஆண்டுகளாக  நேர்மையான நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் மோடியை ஆதரிப்போம். ஊழல், குடும்ப கட்சிகளை தமிழகம் முழுவதும் புறக்கணிப்போம் என அவர் கூறியுள்ளார்.

Tags: sangarapuramannamalaiannamalai speechen maan en makkaltamilnadu bjp president
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் விழாவில் பங்கேறற  இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல்!

Next Post

மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றி உண்மையான அஞ்சலி செலுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதம் – அண்ணாமலை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies