இண்டி கூட்டணியை தொடங்கியவரே அந்த கூட்டணியில் இல்லை - அண்ணாமலை
Oct 3, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணியை தொடங்கியவரே அந்த கூட்டணியில் இல்லை – அண்ணாமலை

தேர்தல் வரும் வரை கூட நீடிக்காத சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 30, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டணி உருவாக காரணமான பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரே அந்த கூட்டணியில் இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,சங்கராபுரம் சட்டமன்றத்தொகுதியில், நேற்று பயணத்தை தொடர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது :

கஷ்டங்களை எல்லாம் போக்கும் கங்கை முத்து மாரியம்மன் அருள்புரியும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத்தொகுதியில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பெரும் திரளெனக் கூடிய பொதுமக்கள் ஆரவாரத்துடன் என் மண் என் மக்கள் பயணம் சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு தொடர்ச்சி மலையின் பழமையான பகுதிகளில் ஒன்றான கல்வராயன் மலை அமைந்துள்ள தொகுதி.

பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 50,030 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,51,824 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,74,938 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 66,512 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,97,714 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,81,648 விவசாயிகளுக்கு, PM Kisan நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், முத்ரா கடன் உதவி 512 கோடி ரூபாய் என, மத்திய அரசின் நலத்திட்டங்கள் லட்சக்கணக்கான மக்களைச்  சென்றடைந்துள்ளன.

பத்து ஆண்டுகளாக, மத்தியில் ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சி வழங்கிக்  கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த சந்தர்ப்பவாத இண்டி கூட்டணியில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தான் இண்டி கூட்டணியைத்  தொடங்கியவர். தற்போது அவரே அந்த கூட்டணியில் இல்லை. இவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணி, தேர்தல் வரும் வரை கூட தாங்கவில்லை.

வரும் பாராளுமன்றத் தேர்தல், நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல், இளைஞர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கான தேர்தல். பத்து ஆண்டுகளாக  நேர்மையான நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் மோடியை ஆதரிப்போம். ஊழல், குடும்ப கட்சிகளை தமிழகம் முழுவதும் புறக்கணிப்போம் என அவர் கூறியுள்ளார்.

Tags: sangarapuramannamalaiannamalai speechen maan en makkaltamilnadu bjp president
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் விழாவில் பங்கேறற  இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல்!

Next Post

மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றி உண்மையான அஞ்சலி செலுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதம் – அண்ணாமலை

Related News

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies