கைலாஷ் மானசரோவர் : விமானம் மூலம் தரிசனம்!
Jul 25, 2025, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைலாஷ் மானசரோவர் : விமானம் மூலம் தரிசனம்!

Web Desk by Web Desk
Jan 30, 2024, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

27,000 அடி உயரத்தில் இருந்து பக்தர்கள் கைலாஷ் மானசரோவரை தரிசனம் செய்ய நேபாளம் புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது.

கயிலை மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் என்று இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலைச் சிகரம் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 6,638 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இம்மலையில் உற்பத்தி ஆகும் ஆறுகள் சிந்து ஆறு, சட்லெச்சு ஆறு, பிரம்மபுத்திரா ஆறு ஆகியவையாகும். இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட இராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.

இந்த இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில் நேபாளத்தில் உள்ள நேபால்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து புதிய விமானம் சேவை நேற்று தொடங்கியது. இந்த விமானத்தில் இருந்து பக்தர்கள் 27,000 அடி உயரத்தில் கைலாஷ் மானசரோவர் சன்னதியை தரிசனம் செய்யலாம்.

இந்தியாவில் இருந்து ‘டூர் தி டெம்பிள்’ டிராவல் ஏஜென்சிக்கும் நேபாளத்தின் ‘பாத் ஹில் டிராவல்ஸ்’ நிறுவனத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

38 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்த விமானம் இமயமலையில் உள்ள தனியார் விமான நிறுவனமான ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் பெரும்பாலும் டெல்லி, மும்பை, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர்.

நேபாளம், நேபால்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இருந்தனர்.

கொரோனா தோற்று நோய்க்கு முன்பு சுமார் 12,000 இந்தியர்கள் நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவருக்கு பயணம் செய்தனர். ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்திய சுற்றுலாப் பயணிகள் கைலாஷ் மானசரோவருக்கு வருவதற்கு சீனா தடை விதித்திருந்தது.

இதற்கிடையில் தற்போது நேபாளம் இந்த விமான சேவையை தொடங்கியது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Kailash Mansarovar: Darshan by plane!
ShareTweetSendShare
Previous Post

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Next Post

கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த பாகிஸ்தானியர்கள்! – அதிரடி காட்டிய இந்தியா!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies