கைலாஷ் மானசரோவர் : விமானம் மூலம் தரிசனம்!
Sep 6, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைலாஷ் மானசரோவர் : விமானம் மூலம் தரிசனம்!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 01:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

27,000 அடி உயரத்தில் இருந்து பக்தர்கள் கைலாஷ் மானசரோவரை தரிசனம் செய்ய நேபாளம் புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது.

கயிலை மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் என்று இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலைச் சிகரம் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 6,638 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இம்மலையில் உற்பத்தி ஆகும் ஆறுகள் சிந்து ஆறு, சட்லெச்சு ஆறு, பிரம்மபுத்திரா ஆறு ஆகியவையாகும். இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட இராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.

இந்த இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில் நேபாளத்தில் உள்ள நேபால்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து புதிய விமானம் சேவை நேற்று தொடங்கியது. இந்த விமானத்தில் இருந்து பக்தர்கள் 27,000 அடி உயரத்தில் கைலாஷ் மானசரோவர் சன்னதியை தரிசனம் செய்யலாம்.

இந்தியாவில் இருந்து ‘டூர் தி டெம்பிள்’ டிராவல் ஏஜென்சிக்கும் நேபாளத்தின் ‘பாத் ஹில் டிராவல்ஸ்’ நிறுவனத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

38 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்த விமானம் இமயமலையில் உள்ள தனியார் விமான நிறுவனமான ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் பெரும்பாலும் டெல்லி, மும்பை, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர்.

நேபாளம், நேபால்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இருந்தனர்.

கொரோனா தோற்று நோய்க்கு முன்பு சுமார் 12,000 இந்தியர்கள் நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவருக்கு பயணம் செய்தனர். ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்திய சுற்றுலாப் பயணிகள் கைலாஷ் மானசரோவருக்கு வருவதற்கு சீனா தடை விதித்திருந்தது.

இதற்கிடையில் தற்போது நேபாளம் இந்த விமான சேவையை தொடங்கியது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Kailash Mansarovar: Darshan by plane!
Share
Tweet
SendShare
Previous Post

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Next Post

கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த பாகிஸ்தானியர்கள்! – அதிரடி காட்டிய இந்தியா!

Related News

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies