பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை... கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Jul 26, 2025, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை… கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Web Desk by Web Desk
Jan 31, 2024, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ.க. தலைவர் ரஞ்சித் சீனிவாஸ் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள மாநிலம் மாவேலிக்கரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாஸ். வழக்கறிஞரான இவர், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வீட்டில் இருந்த ரஞ்சித் சீனிவாஸை, அவரது மனைவி, மகள் மற்றும் தாய் முன்னிலையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.

இக்கொலை சம்பவம் கேரள மாநிலம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) மற்றும் சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட அமைப்புகளைச் சேர்ந்த நிஜாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல்கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சபரூதின், மன்சாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நஸீர், ஜாஹீர் உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷரப் ஆகிய 15 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கேரள மாநிலம் மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அதன்படி, குற்றவாளிகள் 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: KeralaMurder caseBJP leader15 accusedsentenced to death
ShareTweetSendShare
Previous Post

அகிலேஷ் மனைவி டிம்பிள் மெயின்புரி தொகுதியில் போட்டி! – 16 சமாஜ்வாதி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Next Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7 வரை நீட்டிப்பு! – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies