பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை... கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Mar 15, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை… கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 31, 2024, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ.க. தலைவர் ரஞ்சித் சீனிவாஸ் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள மாநிலம் மாவேலிக்கரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாஸ். வழக்கறிஞரான இவர், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வீட்டில் இருந்த ரஞ்சித் சீனிவாஸை, அவரது மனைவி, மகள் மற்றும் தாய் முன்னிலையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.

இக்கொலை சம்பவம் கேரள மாநிலம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) மற்றும் சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட அமைப்புகளைச் சேர்ந்த நிஜாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல்கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சபரூதின், மன்சாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நஸீர், ஜாஹீர் உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷரப் ஆகிய 15 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கேரள மாநிலம் மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அதன்படி, குற்றவாளிகள் 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: KeralaMurder caseBJP leader15 accusedsentenced to death
ShareTweetSendShare
Previous Post

அகிலேஷ் மனைவி டிம்பிள் மெயின்புரி தொகுதியில் போட்டி! – 16 சமாஜ்வாதி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Next Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7 வரை நீட்டிப்பு! – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies