பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை... கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Sep 12, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை… கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 31, 2024, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பா.ஜ.க. தலைவர் ரஞ்சித் சீனிவாஸ் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள மாநிலம் மாவேலிக்கரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாஸ். வழக்கறிஞரான இவர், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வீட்டில் இருந்த ரஞ்சித் சீனிவாஸை, அவரது மனைவி, மகள் மற்றும் தாய் முன்னிலையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.

இக்கொலை சம்பவம் கேரள மாநிலம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) மற்றும் சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட அமைப்புகளைச் சேர்ந்த நிஜாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல்கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சபரூதின், மன்சாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நஸீர், ஜாஹீர் உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷரப் ஆகிய 15 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கேரள மாநிலம் மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அதன்படி, குற்றவாளிகள் 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: KeralaMurder caseBJP leader15 accusedsentenced to death
Share
Tweet
SendShare
Previous Post

அகிலேஷ் மனைவி டிம்பிள் மெயின்புரி தொகுதியில் போட்டி! – 16 சமாஜ்வாதி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Next Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7 வரை நீட்டிப்பு! – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies