கேலோ இந்தியா: சாதனை படைத்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய மத்திய அமைச்சர்!
Oct 26, 2025, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேலோ இந்தியா: சாதனை படைத்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய மத்திய அமைச்சர்!

Web Desk by Web Desk
Feb 1, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இளம் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைக்க மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.

கடந்த 19-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் நடைபெற்றது. இப்போட்டியின் நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில், சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழாவிற்காக 11 நாட்கள் விரதம் மேற்கொண்டிருந்த நிலையிலும், இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் சென்னை வந்ததை அவர் குறிப்பிட்டார்.

தென்மாநிலங்களில் நடைபெறும் முதலாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி இது. விளையாட்டுத் துறையில் இந்தியா தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது நிறைவடைந்துள்ள கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 454 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் மகளிரின் பங்களிப்பு கிட்டதட்ட சரிசமமாக இருந்தது.

இந்தப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மகாராஷ்டிரா, இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாடு, மூன்றாம் இடம் பெற்ற அரியானா ஆகிய மாநிலங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் புதிய தேசிய சாதனைகளைப் படைத்த வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் சாதனைப் படைத்த பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த எளிய குடும்ப பின்னணிக் கொண்டவர்கள். இது போன்ற வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தி சாதனைகளைப் படைக்க கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சிறந்த களமாக அமைந்துள்ளன. இது போன்ற வீரர்களுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து உதவிகளை வழங்கி ஊக்குவிக்கும்.

இந்த விழாவின் முக்கிய நாயகர்கள் இளம் வீரர்கள்தான். ஒவ்வொரு பதக்கமும் வீரர்களின் அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இளம் வீரர்கள் தான் இந்திய விளையாட்டுத்துறையின் எதிர்காலம். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். இந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

Tags: Khelo indiaAnurag Singh Thakur
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளது : நிர்மலா சீதாராமன்

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies