வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளது : நிர்மலா சீதாராமன்
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளது : நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 11:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளதாகவும், அனைவருக்கும் எரிவாயு இணைப்பு, வங்கிக்கணக்கு என்ற இலக்கை எட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம்  நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது, இந்திய மக்கள் நம்பிக்கையுடன்  எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றனர். மக்களின் ஆசியுடன், 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர  மோடியின் தலைமையில்  அரசு பதவியேற்றபோது, சப்கா சாத், சப்கா விகாஸை  மந்திரமாகக் கொண்டு நாடு மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது. அரசாங்கம் அந்தச் சவால்களை சரியான ஆர்வத்துடன் சமாளித்தது என தெரிவித்தார்.

80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழஙகப்பட்டுள்ளன. வளர்ச்சி  திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளது. அனைவருக்கும் எரிவாயு இணைப்பு, வங்கிக்கணக்கு என்ற இலக்கை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சமூக நிதியை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைவரையும் அரவணைக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தேசியக் கல்விக்கொள்கை இந்திய கல்வி துறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஸ்கில் இந்தியா மிஷன் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளது.  3000 புதிய ஐடிஐகளை நிறுவியுள்ளோம்.  7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் என ஏராளமான  உயர்கல்வி  நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

 

Tags: nirmal seetharaman2024 Budget
Share
Tweet
SendShare
Previous Post

கேலோ இந்தியா: சாதனை படைத்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய மத்திய அமைச்சர்!

Next Post

டைம்ஸ் சதுக்கத்தில் நடிகர் சிரஞ்சீவுக்கு வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies