வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளது : நிர்மலா சீதாராமன்
Jul 29, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளது : நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளதாகவும், அனைவருக்கும் எரிவாயு இணைப்பு, வங்கிக்கணக்கு என்ற இலக்கை எட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம்  நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது, இந்திய மக்கள் நம்பிக்கையுடன்  எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றனர். மக்களின் ஆசியுடன், 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர  மோடியின் தலைமையில்  அரசு பதவியேற்றபோது, சப்கா சாத், சப்கா விகாஸை  மந்திரமாகக் கொண்டு நாடு மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது. அரசாங்கம் அந்தச் சவால்களை சரியான ஆர்வத்துடன் சமாளித்தது என தெரிவித்தார்.

80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழஙகப்பட்டுள்ளன. வளர்ச்சி  திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளது. அனைவருக்கும் எரிவாயு இணைப்பு, வங்கிக்கணக்கு என்ற இலக்கை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சமூக நிதியை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைவரையும் அரவணைக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தேசியக் கல்விக்கொள்கை இந்திய கல்வி துறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஸ்கில் இந்தியா மிஷன் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளது.  3000 புதிய ஐடிஐகளை நிறுவியுள்ளோம்.  7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் என ஏராளமான  உயர்கல்வி  நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

 

Tags: 2024 Budgetnirmal seetharaman
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்தியா: சாதனை படைத்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய மத்திய அமைச்சர்!

Next Post

டைம்ஸ் சதுக்கத்தில் நடிகர் சிரஞ்சீவுக்கு வாழ்த்து!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies