3வது முறையாக மக்களின் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம், பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளரிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதோடு இல்லாமல், அதனை செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்தோம். அரசின் கொள்கைகளால், தகுதிவாய்ந்த அனைவரும் பலன்பெற்றுள்ளனர். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது அவர்களுக்கு தெரியும்.
பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, வரும் தேர்தலில், மோடி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே, ஜனரஞ்சக ரீதியிலான வாக்குறுதிகளை நாங்கள் அளிக்கவில்லை. முதல் முறையாக எங்களுக்கு ஆசி வழங்கினர். இரண்டாவது முறையும் வழங்கினர். 3வது முறையும் ஆசி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த 2014ல் நாங்கள் ஆட்சி ஏற்கும் போது பொருளாதாரம் மோசமாக இருந்தது. ஊழல் மற்றும் பொருளாதார சிக்கல் இருந்தது. வெளியிட்டு இருந்தால், பொருளாதார குழப்பம் காரணமாக யாரும் முதலீடு செய்ய முன் வர மாட்டார்கள். இதனை யோசித்து, மக்கள் நலனே முக்கியம் என பிரதமர் கூறினார்.
குழப்ப நிலையில் இருந்து பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எனவே தான் வெள்ளை அறிக்கை அறிக்கை வெளியிட முடிவு செய்தோம். அதற்கான சரியான நேரம் இது தான் எனத் தெரிவித்தார்.