இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இரட்டை சதம் அடித்து இந்திய இளம் வீரர் சாதனை!
Oct 3, 2025, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இரட்டை சதம் அடித்து இந்திய இளம் வீரர் சாதனை!

Web Desk by Web Desk
Feb 3, 2024, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் போட்டி தொடங்கியுள்ளது.  தொடக்கத்திலேயே இந்திய அணியில் தொடக்க வீரர்க களமிறங்கிய ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார்.

நேற்றையப் போட்டி முடிவில் 179 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஸ்வால் இன்று இரட்டை சதம் எடுத்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய ஜெய்ஸ்வால் 191 ரன்களில் இருந்த போது சோயப் பஷீருக்கு எதிராக அதிரடியான சிக்சரை பறக்க விட்டு அடுத்த பந்திலேயே பண்டரியையும் விளாசி தன்னுடைய முதல் இரட்டை சதத்தை அடித்தார்.

குறிப்பாக முதல் நாளிலேயே 94 ரன்களில் இருந்த போது டாம் ஹார்ட்லிக்கு எதிராக அதிரடியான சிக்சரை பறக்க விட்டு சதமடித்த அவர் தற்போது 191 ரன்களில் இருந்த போது பவுண்டரியை விளாசி இரட்டை சதமடித்துள்ளார்.

ஜாம்பவான் வீரேந்திர சேவாக் போல கொஞ்சமும் தயக்கமும் பயமும் இல்லாமல் சதத்தையும் இரட்டை சதத்தையும் ஒரே போட்டியில் அடித்துள்ள ஜெய்ஸ்வால் இப்போட்டியில் இதுவரை 19 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடித்துள்ளார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரர்களும் ஒரு இன்னிங்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 6 சிக்சர்கள் கூட அடித்ததில்லை.

அந்த வகையில் இங்கிலாந்துக்கு சவால் விடும் வகையில் ஜெயிஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் எடுத்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் கேட்ச் பிடிக்க ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

Tags: IndiaenglandYashasviYashasvi JaiswalIndvsEng test200 runs
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரபல டென்னிஸ் வீரர்!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies