எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : மத்திய அரசு அறிவிப்பு!
Jul 26, 2025, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : மத்திய அரசு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Feb 3, 2024, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1927ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கராச்சியில் பிறந்தவர். அரசியல் வாழ்க்கையை 1941ம் ஆண்டில் தனது 14 வயதில் சிறுவனாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கில் ஒரு தொண்டராக தொடங்கினார்.

பின்னர் 1951 ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்ட பாரத ஜனா சங்கத்தின் உறுப்பினராக ஆனார். 1957 ம் ஆண்டு அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டார். அவர் விரைவில் பொதுச் செயலாளராகவும், ஜன சங் தில்லி பிரிவின் தலைவராகவும் செயல்பட்டார்.

அவர் 1970 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976 ல் இருந்து 1982 வரை குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1982 ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை) இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.1990-ம் ஆண்டு அத்வானி குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை சென்றார்.

பீகார் மாநிலத்திற்கு யாத்திரை சென்ற போது அப்போதைய மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து நிறுத்தும்படி சமஸ்திபூர் மாவட்ட கலெக்டருக்கு பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உத்தரவிட்டார்.

அப்போது அந்த மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ஆர்.கே.சிங், அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியதுடன் அவரை கைதும் செய்தார். அத்வானி கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அயோத்தியில் ராமர் கோவில் அமைவதற்கு இந்த ரதயாத்திரை மிக முக்கிய பங்கு வகித்தது என்றே கூறலாம்.

1998 முதல் 2004 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக அத்வானி பதவி வகித்தார். 2002 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் அவர் பணியாற்றினார்.

2015 ஆம் ஆண்டில், அத்வானிக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு பாரத ரத்னா  விருதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: bjpcentral governmentlk advaniBharat Ratna Award!
ShareTweetSendShare
Previous Post

139 ரயில் என்ஜின்களில் கவச் அமைப்பு!

Next Post

U-19 உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதிக்கு தகுதி !

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies