“அய்யோ என்னை மிரட்டுறாங்க”- மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடுத்த அப்டேட்!
Aug 18, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அய்யோ என்னை மிரட்டுறாங்க”- மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடுத்த அப்டேட்!

Web Desk by Web Desk
Feb 4, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டுக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

துப்பாக்கி தயாரிப்பது எப்படி என்பது பற்றி யூடியூபில் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த 2 பேர் காணொளி வெளியிட்டனர். அது தொடர்பாக, நா.த.கயைச் சேர்ந்த 2 பட்டதாரிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டைத் துரைமுருகன், இளையான்குடி விஷ்ணு, ராஜபாளையம் இசை மதிவாணன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனை ரத்துச் செய்யக் கோரி நா.த.க. இளைஞரணி அமைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராகச் சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்போம் என்றும் கைது நடவடிக்கை இருக்காது என்றும் என்.ஐ.ஏ தெரிவித்தது.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனை குறித்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நாட்டுக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, நாட்டுக்கு எதிரான பல்வேறு செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழக போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. இதனால்தான் அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை செய்தனர். தவறு செய்தவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தவறு செய்பவர்களிடம் கேள்வி கேட்டால், “அய்யோ என்னை மிரட்டுறாங்க, அய்யோ என்னைக் காப்பாத்துங்க” என்று அலறும் சத்தமே வருகிறது. அதைத்தான் இப்போதும் தவறு செய்தவர்கள் செய்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மத்திய அரசு ஏஜென்ஸிகள் மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விளக்கத்தை பாஜக மத்திய இணை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: minister l murugan
ShareTweetSendShare
Previous Post

அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு : மலர்களை தூவி வரவேற்ற பொதுமக்கள்!

Next Post

தமிழக அமைச்சர்களின் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு! – அண்ணாமலை

Related News

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies