“அய்யோ என்னை மிரட்டுறாங்க”- மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடுத்த அப்டேட்!
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அய்யோ என்னை மிரட்டுறாங்க”- மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடுத்த அப்டேட்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டுக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

துப்பாக்கி தயாரிப்பது எப்படி என்பது பற்றி யூடியூபில் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த 2 பேர் காணொளி வெளியிட்டனர். அது தொடர்பாக, நா.த.கயைச் சேர்ந்த 2 பட்டதாரிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டைத் துரைமுருகன், இளையான்குடி விஷ்ணு, ராஜபாளையம் இசை மதிவாணன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனை ரத்துச் செய்யக் கோரி நா.த.க. இளைஞரணி அமைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராகச் சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்போம் என்றும் கைது நடவடிக்கை இருக்காது என்றும் என்.ஐ.ஏ தெரிவித்தது.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனை குறித்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நாட்டுக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, நாட்டுக்கு எதிரான பல்வேறு செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழக போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. இதனால்தான் அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை செய்தனர். தவறு செய்தவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தவறு செய்பவர்களிடம் கேள்வி கேட்டால், “அய்யோ என்னை மிரட்டுறாங்க, அய்யோ என்னைக் காப்பாத்துங்க” என்று அலறும் சத்தமே வருகிறது. அதைத்தான் இப்போதும் தவறு செய்தவர்கள் செய்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மத்திய அரசு ஏஜென்ஸிகள் மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விளக்கத்தை பாஜக மத்திய இணை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: minister l murugan
ShareTweetSendShare
Previous Post

அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு : மலர்களை தூவி வரவேற்ற பொதுமக்கள்!

Next Post

தமிழக அமைச்சர்களின் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு! – அண்ணாமலை

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies