“அய்யோ என்னை மிரட்டுறாங்க”- மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடுத்த அப்டேட்!
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அய்யோ என்னை மிரட்டுறாங்க”- மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடுத்த அப்டேட்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டுக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

துப்பாக்கி தயாரிப்பது எப்படி என்பது பற்றி யூடியூபில் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த 2 பேர் காணொளி வெளியிட்டனர். அது தொடர்பாக, நா.த.கயைச் சேர்ந்த 2 பட்டதாரிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டைத் துரைமுருகன், இளையான்குடி விஷ்ணு, ராஜபாளையம் இசை மதிவாணன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனை ரத்துச் செய்யக் கோரி நா.த.க. இளைஞரணி அமைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராகச் சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்போம் என்றும் கைது நடவடிக்கை இருக்காது என்றும் என்.ஐ.ஏ தெரிவித்தது.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனை குறித்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நாட்டுக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, நாட்டுக்கு எதிரான பல்வேறு செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழக போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. இதனால்தான் அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை செய்தனர். தவறு செய்தவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தவறு செய்பவர்களிடம் கேள்வி கேட்டால், “அய்யோ என்னை மிரட்டுறாங்க, அய்யோ என்னைக் காப்பாத்துங்க” என்று அலறும் சத்தமே வருகிறது. அதைத்தான் இப்போதும் தவறு செய்தவர்கள் செய்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மத்திய அரசு ஏஜென்ஸிகள் மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விளக்கத்தை பாஜக மத்திய இணை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: minister l murugan
ShareTweetSendShare
Previous Post

அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு : மலர்களை தூவி வரவேற்ற பொதுமக்கள்!

Next Post

தமிழக அமைச்சர்களின் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies