“அய்யோ என்னை மிரட்டுறாங்க”- மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடுத்த அப்டேட்!
Jul 29, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அய்யோ என்னை மிரட்டுறாங்க”- மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடுத்த அப்டேட்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டுக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

துப்பாக்கி தயாரிப்பது எப்படி என்பது பற்றி யூடியூபில் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த 2 பேர் காணொளி வெளியிட்டனர். அது தொடர்பாக, நா.த.கயைச் சேர்ந்த 2 பட்டதாரிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டைத் துரைமுருகன், இளையான்குடி விஷ்ணு, ராஜபாளையம் இசை மதிவாணன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனை ரத்துச் செய்யக் கோரி நா.த.க. இளைஞரணி அமைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராகச் சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்போம் என்றும் கைது நடவடிக்கை இருக்காது என்றும் என்.ஐ.ஏ தெரிவித்தது.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனை குறித்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நாட்டுக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, நாட்டுக்கு எதிரான பல்வேறு செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழக போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. இதனால்தான் அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை செய்தனர். தவறு செய்தவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தவறு செய்பவர்களிடம் கேள்வி கேட்டால், “அய்யோ என்னை மிரட்டுறாங்க, அய்யோ என்னைக் காப்பாத்துங்க” என்று அலறும் சத்தமே வருகிறது. அதைத்தான் இப்போதும் தவறு செய்தவர்கள் செய்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மத்திய அரசு ஏஜென்ஸிகள் மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விளக்கத்தை பாஜக மத்திய இணை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: minister l murugan
ShareTweetSendShare
Previous Post

அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு : மலர்களை தூவி வரவேற்ற பொதுமக்கள்!

Next Post

தமிழக அமைச்சர்களின் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு! – அண்ணாமலை

Related News

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies