ஏரல் அருகே தொடரும் மரணம் - கண்டு கொள்ளாத தி.மு.க அரசு!
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏரல் அருகே தொடரும் மரணம் – கண்டு கொள்ளாத தி.மு.க அரசு!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏரல் மேல்மட்ட பாலம் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், தற்போது தரைமட்ட பாலம் வழியாகத் தற்காலிகமாகப் போக்குவரத்து நடைபெறுகிறது.

இதனிடையே, அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணல் எடுத்து ஒரு பகுதிக்குச் செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி ஆழமாகவும் சேரும் சகதியும் ஆக மாறியுள்ளது.

இது தெரியாமல் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் நீராடுவதற்காக அந்த பகுதியில் இறங்கி உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே, 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் பலியாகியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாசிங் மகன் கனகவேல். 43 வயதான இவருக்கு ஜோதி லிங்கம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், கனகவேல் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் ஏரல் சேர்மேன் அருணாச்சல சுவாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஆற்றில் நீராட இறங்கியபோது அங்குள்ள நீரில் சேரும் சகதியுமாக இருந்துள்ளது.

இதனால், தடுமாறி தண்ணீரில் விழுந்த கனகவேல் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஜோதி லிங்கம், தனது கணவரைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அப்போது, அங்கே வந்தவர்கள் அது சகதியான பகுதி என்பதால் செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர், அந்த வழியாக வந்த சிலர், தைரியமாக ஆற்றுத் தண்ணீரில் இறங்கி கனகவேலைத் தேடி மீட்டு கரையில் சேர்த்தனர். ஆனால், அவர் நீரிலில் மூழ்கி இறந்துவிட்டது தெரிய வந்தது.

உடனே ஏரல் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கனகவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதங்களில் இது மூன்றாவது உயிரிழப்பாகும்.

இந்த பகுதியில் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், அதனைத் தடுக்க வேண்டியும், மாவட்ட நிர்வாகத்திற்கும், திமுக அரசுக்கும் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருவதாக பொது மக்களும், பக்தர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: deathdmk fail
ShareTweetSendShare
Previous Post

 டி.ஆர்.பாலு கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி உலக சாதனை படைத்த வீரர் – யார் இவர்?

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies