ஏரல் அருகே தொடரும் மரணம் - கண்டு கொள்ளாத தி.மு.க அரசு!
Jul 24, 2025, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏரல் அருகே தொடரும் மரணம் – கண்டு கொள்ளாத தி.மு.க அரசு!

Web Desk by Web Desk
Feb 6, 2024, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏரல் மேல்மட்ட பாலம் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், தற்போது தரைமட்ட பாலம் வழியாகத் தற்காலிகமாகப் போக்குவரத்து நடைபெறுகிறது.

இதனிடையே, அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணல் எடுத்து ஒரு பகுதிக்குச் செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி ஆழமாகவும் சேரும் சகதியும் ஆக மாறியுள்ளது.

இது தெரியாமல் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் நீராடுவதற்காக அந்த பகுதியில் இறங்கி உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே, 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் பலியாகியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாசிங் மகன் கனகவேல். 43 வயதான இவருக்கு ஜோதி லிங்கம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், கனகவேல் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் ஏரல் சேர்மேன் அருணாச்சல சுவாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஆற்றில் நீராட இறங்கியபோது அங்குள்ள நீரில் சேரும் சகதியுமாக இருந்துள்ளது.

இதனால், தடுமாறி தண்ணீரில் விழுந்த கனகவேல் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஜோதி லிங்கம், தனது கணவரைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அப்போது, அங்கே வந்தவர்கள் அது சகதியான பகுதி என்பதால் செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர், அந்த வழியாக வந்த சிலர், தைரியமாக ஆற்றுத் தண்ணீரில் இறங்கி கனகவேலைத் தேடி மீட்டு கரையில் சேர்த்தனர். ஆனால், அவர் நீரிலில் மூழ்கி இறந்துவிட்டது தெரிய வந்தது.

உடனே ஏரல் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கனகவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதங்களில் இது மூன்றாவது உயிரிழப்பாகும்.

இந்த பகுதியில் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், அதனைத் தடுக்க வேண்டியும், மாவட்ட நிர்வாகத்திற்கும், திமுக அரசுக்கும் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருவதாக பொது மக்களும், பக்தர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: deathdmk fail
ShareTweetSendShare
Previous Post

 டி.ஆர்.பாலு கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி உலக சாதனை படைத்த வீரர் – யார் இவர்?

Related News

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies