ஏரல் அருகே தொடரும் மரணம் - கண்டு கொள்ளாத தி.மு.க அரசு!
Jun 14, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏரல் அருகே தொடரும் மரணம் – கண்டு கொள்ளாத தி.மு.க அரசு!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏரல் மேல்மட்ட பாலம் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், தற்போது தரைமட்ட பாலம் வழியாகத் தற்காலிகமாகப் போக்குவரத்து நடைபெறுகிறது.

இதனிடையே, அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணல் எடுத்து ஒரு பகுதிக்குச் செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி ஆழமாகவும் சேரும் சகதியும் ஆக மாறியுள்ளது.

இது தெரியாமல் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் நீராடுவதற்காக அந்த பகுதியில் இறங்கி உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே, 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் பலியாகியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாசிங் மகன் கனகவேல். 43 வயதான இவருக்கு ஜோதி லிங்கம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், கனகவேல் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் ஏரல் சேர்மேன் அருணாச்சல சுவாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஆற்றில் நீராட இறங்கியபோது அங்குள்ள நீரில் சேரும் சகதியுமாக இருந்துள்ளது.

இதனால், தடுமாறி தண்ணீரில் விழுந்த கனகவேல் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஜோதி லிங்கம், தனது கணவரைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அப்போது, அங்கே வந்தவர்கள் அது சகதியான பகுதி என்பதால் செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர், அந்த வழியாக வந்த சிலர், தைரியமாக ஆற்றுத் தண்ணீரில் இறங்கி கனகவேலைத் தேடி மீட்டு கரையில் சேர்த்தனர். ஆனால், அவர் நீரிலில் மூழ்கி இறந்துவிட்டது தெரிய வந்தது.

உடனே ஏரல் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கனகவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதங்களில் இது மூன்றாவது உயிரிழப்பாகும்.

இந்த பகுதியில் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், அதனைத் தடுக்க வேண்டியும், மாவட்ட நிர்வாகத்திற்கும், திமுக அரசுக்கும் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருவதாக பொது மக்களும், பக்தர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: deathdmk fail
ShareTweetSendShare
Previous Post

 டி.ஆர்.பாலு கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி உலக சாதனை படைத்த வீரர் – யார் இவர்?

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies