ஏரல் அருகே தொடரும் மரணம் - கண்டு கொள்ளாத தி.மு.க அரசு!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏரல் அருகே தொடரும் மரணம் – கண்டு கொள்ளாத தி.மு.க அரசு!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 02:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏரல் மேல்மட்ட பாலம் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், தற்போது தரைமட்ட பாலம் வழியாகத் தற்காலிகமாகப் போக்குவரத்து நடைபெறுகிறது.

இதனிடையே, அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணல் எடுத்து ஒரு பகுதிக்குச் செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி ஆழமாகவும் சேரும் சகதியும் ஆக மாறியுள்ளது.

இது தெரியாமல் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் நீராடுவதற்காக அந்த பகுதியில் இறங்கி உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே, 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் பலியாகியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாசிங் மகன் கனகவேல். 43 வயதான இவருக்கு ஜோதி லிங்கம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், கனகவேல் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் ஏரல் சேர்மேன் அருணாச்சல சுவாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஆற்றில் நீராட இறங்கியபோது அங்குள்ள நீரில் சேரும் சகதியுமாக இருந்துள்ளது.

இதனால், தடுமாறி தண்ணீரில் விழுந்த கனகவேல் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஜோதி லிங்கம், தனது கணவரைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அப்போது, அங்கே வந்தவர்கள் அது சகதியான பகுதி என்பதால் செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர், அந்த வழியாக வந்த சிலர், தைரியமாக ஆற்றுத் தண்ணீரில் இறங்கி கனகவேலைத் தேடி மீட்டு கரையில் சேர்த்தனர். ஆனால், அவர் நீரிலில் மூழ்கி இறந்துவிட்டது தெரிய வந்தது.

உடனே ஏரல் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கனகவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதங்களில் இது மூன்றாவது உயிரிழப்பாகும்.

இந்த பகுதியில் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், அதனைத் தடுக்க வேண்டியும், மாவட்ட நிர்வாகத்திற்கும், திமுக அரசுக்கும் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருவதாக பொது மக்களும், பக்தர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: deathdmk fail
Share
Tweet
SendShare
Previous Post

 டி.ஆர்.பாலு கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி உலக சாதனை படைத்த வீரர் – யார் இவர்?

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies