பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, சிறுவனை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது பிடித்தனர்.
பஞ்சாப் மாநிலம் பாலெபெட் கிராமம் அருகே உள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில், வழக்கம்போல் இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஒரு சிறுவன் அத்துமீறி நுழைவதை பார்த்த பாதுகாப்புப் படையினர், அந்த சிறுவனை கைது செய்தனர்.
சிறுவனை சோதனை செய்த அதிகாரிகள், அவனிடம் இருந்த ஒரு செல்போன் மற்றும் 100 ரூபாய் மதிப்புடைய பாகிஸ்தான் பணத்தை கைப்பற்றினர்.
இதனை அடுத்து அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவனுக்கு 16 வயதாகிறது என்பதும், பாகிஸ்தானின் கசூர் பகுதியைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து இந்திய எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.