BIMSTEC நாடுகளுக்கு இடையேயான நீர் விளையாட்டு போட்டி : இன்று தொடக்கம்!
Jul 4, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

BIMSTEC நாடுகளுக்கு இடையேயான நீர் விளையாட்டு போட்டி : இன்று தொடக்கம்!

Web Desk by Web Desk
Feb 6, 2024, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முதலாவது BIMSTEC நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

டெல்லியில் முதல் முறையாக BIMSTEC நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்த ஆண்டு தொடங்குகிறது.

இந்த BIMSTEC நாடுகளில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை உட்பட தெற்காசியாவிலிருந்து ஐந்து மற்றும் மியான்மர் மற்றும் தாய்லாந்து உட்பட தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இரண்டு நாடுகள் உள்ளன.

இதில் மூன்று விளையாட்டுப் போட்டிகளில் 39 பதக்கங்களும், மொத்தம் 9 கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் இதில் பல்வேறு BIMSTEC உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 268 விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய இவர், ” உலகின் 25 சதவீத மக்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வாழ்கின்றனர்.

7 BIMSTEC நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், வங்காள விரிகுடா பகுதியில் பயணம் மற்றும் போக்குவரத்துக்கு மேம்படுவதோடு, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

இந்த நீர் விளையாட்டுப் போட்டி, விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான நட்பை ஆழப்படுத்த உதவுவதுடன், விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கவும் உதவும்.

இந்த நோக்கத்துடனேயே நேபாளத்தில் நடந்த உச்சிமாநாட்டின் போது, இந்த விளையாட்டுத் தொடர்பான அறிவிப்பை பாரத பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார் ” என்று கூறினார்.

மேலும் அவர், BIMSTEC நாடுகளின் கூட்டமைப்பு வரலாற்றில் முதன்முறையாக ஒரு விளையாட்டு போட்டி நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்த தொடக்க விழாவில் நேபாளத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் டிக் பகதூர் லிம்பு மற்றும் BIMSTEC நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலாவது BIMSTEC நீர் விளையாட்டு (அக்வாடிக்ஸ்) சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லியில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி நீச்சல் குள வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில் நீச்சல், வாட்டர் போலோ மற்றும் டைவிங் பிரிவுகளில் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.

Tags: Anurag Thakur Press MeetBIMSTEC
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்!

Next Post

விவசாய நலனுக்காகவும், நல்வாழ்வுக்கும் வாழ்ந்தவர் ஐயா நாராயணசாமி நாயுடு! – அண்ணாமலை

Related News

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies