நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த மதத் தலைவர்கள்!
Oct 6, 2025, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த மதத் தலைவர்கள்!

Web Desk by Web Desk
Feb 6, 2024, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையைச் சேர்ந்த மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் நாடாளுமன்ற வளாகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையின் கீழ், 24 மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் திங்கட்கிழமை பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து மத ஒற்றுமையின் செய்தியை வெளி உலகுக்கு கூற விரும்புவதாக தெரிவித்தனர்.

இக்குழுவில் சீக்கிய, ஜெயின், கிறிஸ்தவ மற்றும் பார்சி மாதங்களை சேர்ந்தவர்களும், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இல்யாசி மற்றும் மகாபோதி சர்வதேச தியான மையத்தின் நிறுவனர் பிக்கு சங்கசேனா ஆகியோர் அடங்குவர்.

இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “நாடாளுமன்ற வளாகத்தில் மதத் தலைவர்கள் குழுவினரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் வளர்ச்சிப்பாதை குறித்து அவர்கள் என்னிடம் தெரிவித்த கனிவான வார்த்தைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறினார். மேலும், மதத் தலைவர்களை சந்தித்த போது எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் அனைத்து சிறுபான்மை மதத் தலைவர்களும் கூறியதாவது,“நம்முடைய சாதிகள், பழக்கவழக்கங்கள், மதங்கள், பிரார்த்தனை முறைகள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் மனிதனாகிய நமது மிகப்பெரிய மதம் மனிதநேயம். நாம் அனைவரும் ஒரே நாட்டில் வாழ்கிறோம்.

நாம் அனைவரும் பாரதத்தில் வாழ்பவர்கள். வாருங்கள் நம் நாட்டை பலப்படுத்துவோம். நாம் அனைவரும் இணைந்து நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு மீண்டும் ஒரு ‘விஸ்வகுரு’வாக மாறுவது நெருங்கிவிட்டது. அது நடக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் இந்தக் காட்சிகள் நமது காலம் மாறிவருகிறது என்பதற்குச் சான்று.”, என்று கூறினர்.

இந்திய சிறுபான்மை அறக்கட்டளையின் நிறுவனர் ஹிமானி சூட் கூறுகையில், இந்த அறக்கட்டளை 24 மதத் தலைவர்களைக் கொண்ட குழுவை புதிய நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றது. பிரதமர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவைரை சந்தித்தோம். “நமது தேசம் ஒன்றல்ல, எல்லா மதங்களும் ஒன்றாக நிற்பதில்லை என்று ஒரு கதை உருவாக்கப்படுகிறது. நாம் ஒன்றாக நிற்போம், நமது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை ஆதரிப்போம் என்ற செய்தியை உலகுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்று கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ் ?

Next Post

மாற்றத்தை ஏற்படுத்தும் முத்ரா திட்டம்! – பிரதமர் மோடி

Related News

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies