நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த மதத் தலைவர்கள்!
Jan 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த மதத் தலைவர்கள்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையைச் சேர்ந்த மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் நாடாளுமன்ற வளாகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையின் கீழ், 24 மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் திங்கட்கிழமை பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து மத ஒற்றுமையின் செய்தியை வெளி உலகுக்கு கூற விரும்புவதாக தெரிவித்தனர்.

இக்குழுவில் சீக்கிய, ஜெயின், கிறிஸ்தவ மற்றும் பார்சி மாதங்களை சேர்ந்தவர்களும், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இல்யாசி மற்றும் மகாபோதி சர்வதேச தியான மையத்தின் நிறுவனர் பிக்கு சங்கசேனா ஆகியோர் அடங்குவர்.

இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “நாடாளுமன்ற வளாகத்தில் மதத் தலைவர்கள் குழுவினரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் வளர்ச்சிப்பாதை குறித்து அவர்கள் என்னிடம் தெரிவித்த கனிவான வார்த்தைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறினார். மேலும், மதத் தலைவர்களை சந்தித்த போது எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் அனைத்து சிறுபான்மை மதத் தலைவர்களும் கூறியதாவது,“நம்முடைய சாதிகள், பழக்கவழக்கங்கள், மதங்கள், பிரார்த்தனை முறைகள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் மனிதனாகிய நமது மிகப்பெரிய மதம் மனிதநேயம். நாம் அனைவரும் ஒரே நாட்டில் வாழ்கிறோம்.

நாம் அனைவரும் பாரதத்தில் வாழ்பவர்கள். வாருங்கள் நம் நாட்டை பலப்படுத்துவோம். நாம் அனைவரும் இணைந்து நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு மீண்டும் ஒரு ‘விஸ்வகுரு’வாக மாறுவது நெருங்கிவிட்டது. அது நடக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் இந்தக் காட்சிகள் நமது காலம் மாறிவருகிறது என்பதற்குச் சான்று.”, என்று கூறினர்.

இந்திய சிறுபான்மை அறக்கட்டளையின் நிறுவனர் ஹிமானி சூட் கூறுகையில், இந்த அறக்கட்டளை 24 மதத் தலைவர்களைக் கொண்ட குழுவை புதிய நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றது. பிரதமர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவைரை சந்தித்தோம். “நமது தேசம் ஒன்றல்ல, எல்லா மதங்களும் ஒன்றாக நிற்பதில்லை என்று ஒரு கதை உருவாக்கப்படுகிறது. நாம் ஒன்றாக நிற்போம், நமது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை ஆதரிப்போம் என்ற செய்தியை உலகுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்று கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ் ?

Next Post

மாற்றத்தை ஏற்படுத்தும் முத்ரா திட்டம்! – பிரதமர் மோடி

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies