ராஜஸ்தானில் இந்திய விமான படையின் வாயுசக்தி பயிற்சிக்கான ஆயுத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் வரும் 17ஆம் தேதி வாயுசக்தி பயிற்சியை இந்திய விமானப்படை நடத்த உள்ளது.
ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உட்பட அனைத்து முன்னணி விமானங்களும் வாயுசக்தி பயிற்சியில் பங்கேற்கவுள்ளது.
மேலும் இந்த பயிற்சியில் உள்நாட்டு தேஜஸ், பிரசாந்த், த்ருவ் உட்பட 121 விமானங்கள் பங்கேற்கும். ரஃபேல், மிராஜ்-2000, சுகோய்-30 எம்கேஐ, ஜாகுவார், ஹாக், சி-130ஜே, சினூக், அப்பாச்சி, எம்ஐ-17 ஆகிய விமானங்களும் பங்கேற்கின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில், இந்திய விமான படையின் வாயுசக்தி பயிற்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.