அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டதை அடுத்து, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறார் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தாங்கள் மூன்று கோயில்களைக் கேட்பதாகவும் பாபர் மசூதி, ஞானவாபி மசூதி, மதுரா மசூதி, கிருஷ்ணர் மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்து கவிஞர் ராம்தாரி சிங் தினகரின் ‘கிருஷ்ணா கி சேதவாணி’ என்ற கவிதையை ‘ராஷ்மிரதி’ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டினார். “மகாபாரதத்தில் போர் தொடங்குவதற்கு முன், பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களைக் கொடுக்கும்படி துரியோதனனை கிருஷ்ணர் வற்புறுத்தினார். அதுபோல, கடவுளின் அவதார இடங்களான அயோத்தி, காசி, மதுரா ஆகிய எங்களின் மூன்று புனித தலங்களைக் கேட்கிறோம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். பின்னர், அயோத்தியில் கும்பாபிஷேகம் முடிந்ததும், நாம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று இரவோடு இரவாகத் தடுப்புகளை அகற்றினார் நந்திபாபா ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதுபோல, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதமாக இருக்கிறார் (மதுரா மசூதி” என்று தெரிவித்தார்.