சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கட்டுமான பணிகள் தொடர்பாக ரூ.50 கோடி அளவிற்கு லஞ்சம் கொடுத்ததாக அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
நுங்கம்பாக்கம், கே.கே.நகர், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கே.கே.நகர் வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர்.