இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ராஷ்டீரிய லோக்தளம்!
Mar 19, 2026, 02:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ராஷ்டீரிய லோக்தளம்!

பாஜக கூட்டணியில் இணைவதாக ஜெயந்த் சவுத்ரி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த நிகழ்வு  இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமரான சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட  நிலையில், இண்டி கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டீரிய லோக்தளம் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான பிவி நரசிம்மராவ், சவுத்ரி  சரண் சிங் ஆகியோருக்கு மத்திய அரசு  பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.  அதேபோல் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் நாட்டின் உயரிய சிவிலியன் விருது  வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பேரனும், ராஷ்டீரிய லோக்தளம் கட்சி தலைவருமான ஜெயந்த் சவுத்ரி இண்டி கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்து கொண்டுள்ளார் என்பதை இந்த முடிவு நிரூபிப்பதாக கூறியுள்ளார்.

இது ஒரு  உணர்ச்சிகரமான நாள். எனக்கான தருணம்.குடியரசுத்தலைவர்,பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில் இது அவரது தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாகும்.

முந்தைய அரசாங்கங்களால் இன்று வரை செய்ய முடியாதது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் நிறைவேறியுள்ளது.  பா.ஜ.க. கூட்டணி அழைப்பை என்னால் நிராகரிக்கமுடியவில்லை. வேறு எந்த அரசியல் கட்சியாலும்  செய்யமுடியாத பணிகளை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை செய்துள்ளது என தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.  இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினை நீடித்து வரும் நிலையில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. அதேபோல், கூட்டணியில் சமாஜ்வாதி கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு முரண்பாடு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Lok Sabha pollsBJP-RLD allianceblow to INDIA blocformer Prime Minister Chaudhary Charan SinghJayant Chaudhary
ShareTweetSendShare
Previous Post

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது! – மோடிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

பாரத ரத்னா’ விருது அறிவிப்பு! – மோடிக்கு நன்றி தெரிவித்த எல்.முருகன்!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies