கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவிப்பு!
Jan 14, 2026, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவிப்பு!

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானை ஆதரிக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற நிலையில் அங்கு எந்த கட்சிக்கும்  தனி மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சிறையில் உள்ள இம்ரான் கானின் கட்சி போட்டியிடு தடை விதிக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். வாக்கு  எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன.

265 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் கானை ஆதரித்த சுயேச்சை வேட்பாளர்கள் 98 இடங்களையும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி 69  இடங்களையும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 51  இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

எஞ்சிய இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதனிடையே அந்நாட்டு ராணுவத்தால் நிறுத்தப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI)-ஐ ஆதரிக்கும் சுயேச்சை  வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும்,  நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி தனிப்பெரும் கட்சியாக  உருவெடுத்துள்ளது.

எனினும், இந்த அறிவிப்பை ரத்து செய்ய கோரி சில இடங்களில் அரசியல் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்தது. அரசு வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. அவர்களை கலைக்க போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த தனது அரசாங்கம்  முயற்சிக்கும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் நவாஸ் ஷெரீப்  தெரிவித்துள்ளார்.மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: election resultsimran khannawaz sharifPakistan Muslim LeaguePakistan Tehreek-e-Insafgeneral elections
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : ஹரியானா அணி அபார வெற்றி !

Next Post

பேருந்து இல்லாததால் பயணிகள் சாலை மறியல் : சென்னை முழுவதும் போராட்டம் வெடிக்கும் என அண்ணாமலை எச்சரிக்கை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies