ஆயுதப் படைகளின் விண்வௌி தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கூறியுள்ளார்.
டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மானசா மையத்தில் 3 நாள் விண்வௌி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியான டெஃப்சாட் நேற்று தொடங்கியது. இதனை முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “விண்வௌி விரிவாக்கம் முதல் ஆய்வு வரை உயர்திறன் மிக்க தற்சார்பு விண்வௌி பாதுகாப்பு சூழலை உருவாக்குவதற்கான தருணம் இது.
அதிவேக, பாதுகாப்பான செயற்கை கோள் உதவியுடனான தகவல் தொடர்பை மேம்படுத்துவது அவசியம். நிலம், வானம், கடல் போன்ற களங்களில் போர்த்திறனை மேம்படுத்த விண்வௌியை ஒரு சக்தியாக பயன்படுத்த முடியும்.
ஆயுதப்படைகளின் திறன்களை வலுப்படுத்த விண்வௌியை மூலதனமாக்கும் முயற்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ரூ.25,000 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர், இந்த வாய்ப்பை தனியாா் விண்வெளித் துறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாட்டின் அமிா்த காலத்தில் திறமையான, தன்னிறைவான, பாதுகாப்பான விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை தனியாா் விண்வெளித் துறை உருவாக்க வேண்டும் என்றாா். தொடக்க நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதா் பிலிப் கிரீன், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.