புரோ ஹாக்கி லீக் தொடர் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
5-வது புரோ ஹாக்கி லீக் தொடர் 9 அணிகளுக்கு இடையே பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் இரண்டு சுற்று லீக் போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரில் வரும் 10ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதேபோல் ரூர்கேலாவில் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் தலா 2 முறை விளையாடவுள்ளது.
இந்திய அணி தனது முதலாவது லீக் போட்டியில் நேற்று 10 விளையாடியது. இதில் இந்தியா ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோலும், ஜுக்ராஜ் சிங், லலித் குமார் உபாத்யாய் ஆகியோர் தலா 1 கோலும் அடித்து அசத்தியது.