என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பா.ஜ.,க தேசிய தலைவர் நட்டா பங்கேற்றுள்ளார்.
என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பங்கேற்க வந்த பா.ஜ.,க தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவை சென்னை விமான நிலையத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தற்போது சென்னை பிராட்வேயில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பா.ஜ.,க தேசிய தலைவர் நட்டா, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இவர்களை பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் தேசிய தலைவர் ஜே. பி. நட்டா துறைமுகத்தில் தங்கசாலை தெருவில் உள்ள மணி குண்டு (near mint metro) அருகாமையில் நடைபெறும் என் மண் என் மக்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார்.