அயோத்தி ராமர் கோயிலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அகியோர் தங்களது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் ஜனவரி 22-ஆம் தேதி குழந்தை ராமர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் சென்று வருகின்றனர்.
இந்த கோயிலின் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அரவிந்த் கேஜரிவாலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்திருந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
தரிசனன் குறித்து எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கேஜரிவால், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ததாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
माता-पिता और अपनी धर्मपत्नी के साथ आज अयोध्या जी पहुँचकर श्रीराम मंदिर में रामलला जी के दिव्य दर्शन करने का सौभाग्य प्राप्त हुआ। इस अवसर पर भगवंत जी एवं उनका परिवार भी साथ रहा। सबने मिलकर मर्यादा पुरुषोत्तम भगवान श्रीराम जी के दर्शन किए एवं देश की तरक़्क़ी के साथ समस्त मानवता के… pic.twitter.com/P6L8StiSOv
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 12, 2024
இன்று, என் பெற்றோர் மற்றும் என் மனைவியுடன் அயோத்தியை அடைந்த பிறகு, ஸ்ரீராமர் கோவிலில் ராம்லாலா ஜியின் தெய்வீக தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் பகவந்த் ஜி மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
அனைவரும் ஒன்றாக பகவான் ஸ்ரீ ராம் ஜியை தரிசனம் செய்து, நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தோம்.
பகவான் ஸ்ரீ ராமச்சந்திர ஜி அனைவருக்கும் ஆசி வழங்கட்டும்.
ஜெய் ஸ்ரீ ராம் 🙏 எனத் தெரிவித்துள்ளார்.