மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலையில் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் அடிப்படையிலான கட்டண வசூலை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது.
பெங்களூரு மைசூர் விரைவுச்சாலையை பாரத பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2023-யில் திறந்து வைத்தார். இந்த விரைவுச்சாலையானது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் பயண நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.
மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலையில் 10-வழிச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு (Global Navigation Satellite System) சோதனையை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது.
நாடாளுமன்றத்தின் மேலவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் திட்டத்தை வெளிப்படுத்தினார்.
வரும் மக்களைவை தேர்தளுக்கு முன்பு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று உறுதியளித்துள்ளார்.
இந்த தொழில்நுட்பம் ஒரு வாகனம் டோல் கேட்டை அடையும் போது, காரின் பதிவு பலகையின் புகைப்படம் பிடிக்கப்படும். அதன் பிறகு, பயணித்த தூரத்தின் அடிப்படையில் கணக்கில் இருந்து கட்டணம் செலுத்தப்படும்.
கட்டணம் செலுத்துவதற்காக டோல் கேட்களில் நிறுத்த வேண்டிய அவசியமின்றி வாகனங்கள் தடையின்றி செல்ல இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.