காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர்.
காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான அவர்,நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் இன்று முறைப்படி அவர் பாஜகவில் இணைந்தார். மும்பையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அசோக் சவான், “இன்று எனது அரசியல் வாழ்க்கையின் புதிய பயணம் தொடக்குறிகிறது. இன்று பாஜகவில் முறைப்படி இணைகிறேன். மகாராஷ்டிராவின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
அடுத்த இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ளது. இந்த ஆண்டு அக்டோபருக்குள் மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிடிலையில், அசோக் சவானின் இந்த விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியிலும், பாபா சித்திக்கி, அஜித் பவாரின் கட்சியிலும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.