எனது குடும்பத்தை சந்திக்க வருவதாக உணர்கிறேன் : அபுதாபி சென்ற பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
Jun 18, 2025, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எனது குடும்பத்தை சந்திக்க வருவதாக உணர்கிறேன் : அபுதாபி சென்ற பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Feb 13, 2024, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இருநாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,13) சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை கட்டி அணைத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நக்யான் வரவேற்றார்.பின்னர் அந்நாட்டின் ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் அபுதாபியில் UPI RuPay card பணப்பரிவர்த்தனையை இரு தலைவர்களும் தொடங்கி வைத்தனர்.

அப்போது தங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி. நான் உங்களைச் சந்திக்க இங்கு வரும்போதெல்லாம், எனது குடும்பத்தைச் சந்திக்க வருவதாகவே உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை சந்தித்தோம், இது மிகவும் அரிதானது மற்றும் நமது நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் எனது அழைப்பை ஏற்று சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு வந்ததற்கு நன்றி. இந்த நிகழ்வை நீங்கள் புதிய உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளீர்கள் என பிரதமர் மோடி அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நக்யானுக்கு நன்றி தெரிவித்தார்.

இன்று நாம் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இது  மகிழ்ச்சியான விஷயம். இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்த முக்கியமான திசையில் முன்னேறி வருகின்றன என்பது ஜி 20 நாடுகளுக்கு  ஒரு பெரிய செய்தியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் மோடி குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து அபுதாபியில் நடைபெறும் அஹ்லான் மோடி என்ற இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் சுமார் 60,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் அவர் கத்தார் நாட்டிற்கு செல்கிறார்.

Tags: uaeAbu Dhabiindian pm modiUPI RuPay cardUAE President Sheikh Mohammed Bin Zayed Al NahyanModi
ShareTweetSendShare
Previous Post

ஜே.இ.இ. முதன்மை தேர்வு!- முதலிடம் பெற்ற முகுந்த் பிரதீஷிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

தி.மு.க.வின் மனநிலை என்னவென்று எனக்கு தெளிவாகத் தெரியவில்லை! – அண்ணாமலை

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies