15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்கள் உறுப்பினர் பதவிக் காலம் அண்மையில் நிறைவு பெற்றது. இதனால், காலியாக உள்ள பதவிகளை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை பா.ஜ.க தேசிய தலைமை அறிவித்துள்ளது. அந்த வகையில், குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை பா.ஜ.க தலைமை அறிவித்துள்ளது.
இதேபோல், காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அசோக் சவான், மகாராஷ்டிரா மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தர பிரதேசம் மாநிலத்தில், பா.ஜ.க தலைவர் சுதன்ஷூ திரிவேதி, இவருடன் மேலும் 6 பா.ஜ.க வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.சிங், முன்னாள் எம்.பி. சவுத்திரி தேஜ்வீர் சிங் மற்றும் அமர்பால் மவுரியா, சங்கீதா பல்வந்த், சாதனா சிங், ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ராஜ்யசபா தேர்தலையொட்டி, பா.ஜ.க தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவித்துள்ளது.