நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்! - ராஜ்நாத் சிங்
Apr 29, 2026, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்! – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.

பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக (PMML) சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் நேற்று  (13 பிப்ரவரி 2024) நடைபெற்றது. இந்த சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் ஆண்டறிக்கை மற்றும் ஆய்வு செய்யப்பட்ட கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது உரையில்,

பிரதமர் அருங்காட்சியகத்தை இந்தியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 7.5 லட்சம் பேர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளனர் என்று கூறினார். ஒவ்வொருவரும் சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாறு குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.  அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் இளைய தலைமுறையினர், நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து உத்வேகம் பெறுவார்கள் என்று  தெரிவித்தார்.

நவீன மற்றும் தற்கால இந்திய வரலாற்றில் இந்த அருங்காட்சியகம்  முன்னணி இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நவீன மற்றும் சமகால இந்தியாவின் மகத்தான ஆளுமைகளின் மிகப்பெரிய களஞ்சியத்தை நிறுவனத்தின் கையெழுத்துப் பிரதிகள் பிரிவு கொண்டுள்ளது என்று எடுத்துரைத்தார். அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கிய ஆதாரமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது என்று தெரிவித்தார்.

அடல் பிஹாரி வாஜ்பாயின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் ஒன்பது தொகுதிகளை வெளியிட்டதற்காகவும், அவரது நூற்றாண்டு விழாவில் மேலும் 11 தொகுதிகளை வெளியிடும் எதிர்காலத் திட்டத்திற்காகவும் இந்த அருங்காட்சியக நிறுவனத்தை பாராட்டினார்.

ராஜகோபாலாச்சாரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் நிறுவனத்தால் வெளியிடப்படுவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட எல்லை வரலாற்றுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காகவும் இந்த அருங்காட்சியக சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நிர்வாகக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா சங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வை குறித்தும் பேசினார்.

Tags: Defense Minister Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி வழக்கு – மீண்டும் நாளை விசாரணை!

Next Post

ஜே.பி. நட்டா உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies