நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்! - ராஜ்நாத் சிங்
Jul 29, 2026, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்! – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.

பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக (PMML) சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் நேற்று  (13 பிப்ரவரி 2024) நடைபெற்றது. இந்த சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் ஆண்டறிக்கை மற்றும் ஆய்வு செய்யப்பட்ட கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது உரையில்,

பிரதமர் அருங்காட்சியகத்தை இந்தியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 7.5 லட்சம் பேர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளனர் என்று கூறினார். ஒவ்வொருவரும் சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாறு குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.  அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் இளைய தலைமுறையினர், நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து உத்வேகம் பெறுவார்கள் என்று  தெரிவித்தார்.

நவீன மற்றும் தற்கால இந்திய வரலாற்றில் இந்த அருங்காட்சியகம்  முன்னணி இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நவீன மற்றும் சமகால இந்தியாவின் மகத்தான ஆளுமைகளின் மிகப்பெரிய களஞ்சியத்தை நிறுவனத்தின் கையெழுத்துப் பிரதிகள் பிரிவு கொண்டுள்ளது என்று எடுத்துரைத்தார். அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கிய ஆதாரமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது என்று தெரிவித்தார்.

அடல் பிஹாரி வாஜ்பாயின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் ஒன்பது தொகுதிகளை வெளியிட்டதற்காகவும், அவரது நூற்றாண்டு விழாவில் மேலும் 11 தொகுதிகளை வெளியிடும் எதிர்காலத் திட்டத்திற்காகவும் இந்த அருங்காட்சியக நிறுவனத்தை பாராட்டினார்.

ராஜகோபாலாச்சாரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் நிறுவனத்தால் வெளியிடப்படுவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட எல்லை வரலாற்றுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காகவும் இந்த அருங்காட்சியக சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நிர்வாகக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா சங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வை குறித்தும் பேசினார்.

Tags: Defense Minister Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி வழக்கு – மீண்டும் நாளை விசாரணை!

Next Post

ஜே.பி. நட்டா உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies