செந்தில் பாலாஜி வழக்கு - மீண்டும் நாளை விசாரணை!
Apr 29, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு – மீண்டும் நாளை விசாரணை!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த அ.தி.மு.க ஆட்சியில், அதாவது 2011 – 2015-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோதமாக வேலை வாங்கித் தருவதாகக் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் தன்னை இணைத்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.

அதன் பேரில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, கடந்த ஜூன் 14 -ம் தேதி கைது செய்தது.

இதனால், அவரது தம்பி அசோக் குமார் தலைமறைவானார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்தார். இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை விரைவாக விசாரணையை விரைந்து முடிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது.

மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரும் தலைமறைவாக உள்ள நிலையில், செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியேவிட்டால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை பிற்பகல் மீண்டும் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: dmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன்! – அமலாக்கத் துறை

Next Post

நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்! – ராஜ்நாத் சிங்

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies